Skip to main content

மெட்டி போடும் வீடியோ வெளியானதால் நடிகை நிலானி தலைமறைவு: தேடுகிறது போலீஸ்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
nila



உதவி இயக்குநர் காந்தி தற்கொலை விவகாரத்தில் சின்னத்திரை நடிகை நிலானி தலைமறைவாக உள்ளார். நிலானியின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவரை கே.கே.நகர் போலீசார் தேடி வருகின்றனர். 
 

கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார் நிலானி. அந்தப் புகாரில், தன்னிடம் பழகிய காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். 
 

புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். இதனையடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் காந்தியின் உடல் திருவண்ணாமலையைச் சேர்ந்த அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 

காந்தி உயிரிழந்தவுடனேயே, நிலானியும் காந்தியும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாக குறிப்பிட்ட காந்தியின் உறவினர்கள், அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டனர். 
 

வீடியோக்களிலும், புகைப்படங்களிலும் காந்தியும், நிலானியும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அவை அனைத்தும் படுக்கை வசதி கொண்ட ஆம்னி சொகுசுப் பேருந்தில் எடுக்கப்பட்டதாகும். 

 

nilani nila


 

nilani nila


 

nilani nila


அதில் ஒரு வீடியோவில் காந்தி லலித்குமாருடன் உல்லாசமாக இருக்கும் போது காந்தியின் கால்மேல் தனது காலை வைத்து நிலானி மெட்டியை காட்டும் போட்டோவும் உள்ளது. வீடியோவும் உள்ளது.
 

மேலும் வீடியோவில் பேசியிருக்கும் காந்தி, தனக்கும் நிலானிக்கும் திருமணமான நாள் செப்டம்பர் 4ஆம் தேதி என குறிப்பிட்டுள்ளார். 
 

காந்தியை பொறுத்தவரை நண்பராகத்தான் பழகினேன் என்று நிலானி கூறியுள்ளார். இருப்பினும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் இருவரும் நெருக்கமாக இருப்பதுபோன்று உள்ளதால் நிலானியை விசாரிக்க முடிவு செய்துள்ளனர் போலீசார். 
 

வளசரவாக்கத்தில் உள்ள நிலானியின் வீட்டிற்கு பலமுறை போலீசார் சென்று பார்த்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரது செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. நிலானியை விசாரித்தால்தான் அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.