Skip to main content

போலீசார் பறிமுதல் செய்த ரூ.1.50 கோடியை திரும்ப பெற்றுத் தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

மக்களவை தேர்தலையொட்டி நடந்த வாகன தணிக்கையின்போது பிடிபட்ட 1.50 கோடியை திரும்ப பெற்று தருவதாக, போலீசிடம் பணத்தை பறிகொடுத்த நபரிடமே மேலும் 36 லட்சத்தை அபகரித்த நபரை ஈரோடு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 

money



சென்னை விருகம்பாக்கம் சேர்ந்த முகமது ரியாஜூதீன் சென்ற சில வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் சந்தோஷ்பால். கத்தார் நாட்டில் இவர் வசிக்கிறார். இந்த சந்தோஷ்பாலின் உறவினர் மாத்யூஸ். மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் இவருக்கு சொந்தமான இடத்தை விலை பேசி அதன் முன்பணமாக ரூ.1.50 கோடி ரூபாயை கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ந் தேதி ஒரு காரில் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள மாத்யூவின் சகோதரர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது நடந்த மக்களவை தேர்தலையொட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வரும்போது ரூ.1.50 கோடி பணத்தை தனிக்கை செய்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக தனது நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் நாவலுார் என்ற ஊரைச்சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் சந்தோஷ்பால் தகவல் கூறி உள்ளார்.

அப்போது வெங்கடேஷ், ''தனக்கு மத்திய அரசு அதிகாரிகள் பழக்கம் உள்ளது, ஐஆர்எஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆகவே போலீஸ் பறிமுதல் செய்த பணத்தை அப்படியே மீட்டுக்கொடுக்கிறேன் என கூறியிருக்கிறார். பணத்தை அப்படியே திரும்ப பெற வேண்டும் என்றால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் தர வேண்டும், அதற்கு எவ்வளவு என பேசிவிட்டேன். குறைந்தது ரூ.35 லட்சம் கொடுக்கனும், இதை செய்து கொடுக்கிற எனக்கு ரூ.1 லட்சம் என்று கூறியிருக்கிறார்.

இதை அப்படியே நம்பிய ரியாஜூதீன், சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கி மூலம் ரூ.36 லட்சம் பணத்தை வெங்கடேஷின் கணக்கிற்கு அப்போது அனுப்பி வைத்துள்ளார். ரூ.36 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்ட வெங்கடேஷ் போலீசார் பறிமுதல் செய்த ரூ.1.50 கோடி பணத்தை பல மாதமாகியும் மீட்டுக்கொடுக்கவில்லை. மீட்பதற்காக கொடுக்கப்பட்ட ரூ.36 லட்சத்தையும் அவர்களுக்கு  திரும்ப கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றியதோடு பல முறை பணத்தை கேட்டும் திருப்பிக்கொடுக்காமல் இருந்ததோடு தனது பவர் மத்திய அரசு வரை உள்ளது என்று கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளார் வெங்கடேஷ்.

இதை தொடர்ந்து  ரியாஜூதீன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சென்னை சலீம் என்பவரையும் தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி பேர்வழி எத்தனை பேரை இதைப்போல ஏமாற்றினான் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும்.

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.