Skip to main content

அ.திமுகவிற்கு அடித்தளம் போட்ட திண்டுக்கல்  தொகுதி பா.ம.க.வுக்கு?

Published on 12/03/2019 | Edited on 12/03/2019


    திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து புதிதாக அ.தி.மு.க.வை தொடங்கியது 1973ல் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவரை எம்.ஜி.ஆர். போட்டியிட வைத்து அமோக வெற்றி பெற வைத்தார். அந்த அளவுக்கு அ.தி.மு.க.விற்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததே திண்டுக்கல் தொகுதி தான். இந்த இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்த மாயத்தேவர் தான் சுயேட்சை சின்னமாக இரட்டை இலையை தேர்வு செய்தார்.

 

m

தன்பின் தான் இந்த இரட்டை இலை அ.தி.மு.க.வின் அங்கீகார சின்னமாக மாறி பெரும்பாலான மக்கள் மனதிலும் இன்றுவரை இரட்டை இலை நிலைத்து நிற்கிறது. அதுபோல் 1952ல் பாராளுமன்றம் தொடங்கி இன்றுவரை 17 பேர் போட்டியிட்டு இருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவர் இரண்டு முறையும், நடராஜன் ஒருமுறையும்,தற்போது வனத்துறை அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் நான்குமுறையும் வெற்றி பெற்று இருக்கிறார். அதுபோல் தற்போது அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.பி.யாக உதயக்குமாரும் இருக்கிறார். 

 

s


இப்படி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி உருவாகியதின் மூலம் 17 முறை அரசியல் கட்சிகள் போட்டி போட்டதில் எட்டு முறை அ.தி.மு.க. இத்தொகுதியை தக்க வைத்துள்ளது. அதுபோல் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருக்கும் வரை தொடர்ந்து இந்த திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமலேயே அ.தி.மு.க.வே போட்டி போட்டு இருக்கிறது. அப்படி இரக்கும் போது தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் ஜெ. மறைவுக்கு பிறகு முதன் முதலாக நடக்கிறது. அதனால் கட்சியும், ஆட்சியும் தற்போது இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். கையில் இருப்பதால் இருவரும் சேர்ந்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அ.தி.மு.க. உடன் பா.ம.க., பி.ஜேபி, தே.மு.தி.க. உட்பட சில கட்சிகள் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். 

 

இப்படி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கி உள்ளதாகவும் தெரிகிறது. அதுபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளரான கவிஞர் திலகபாமா தான் பா.ம.க. வேட்பாளராக அறிவிக்க போகிறார்கள் என்ற பேச்சும் பரவலாக இருந்து வருகிறது. அந்த திலகபாமாவின் சொந்தஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி. அதிலயும் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டபிள்யுபிஏ. சௌந்தரபாண்டியாரின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

t

 

ஏற்கனவே திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை பா.ம.க. சார்பில் பால்பாஸ்கர் போட்டியிட்டார். அதுபோல் பா.ம.க. சார்பில் இந்த முறை பாராளுமன்ற தேர்தலுக்கு கவிஞர் திலகபாமா களமிறங்க போகிறார் என்று பா.ம.க.வினரோ உற்சாகமாக இருந்து வருகிறார்கள். 


இது சம்மந்தமாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளரான கவிஞர் திலகபாமாவிடம் கேட்டபோது... அ.தி.மு.க. கூட்டணியுடன் ஐயா தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறாரே தவிர இன்னும் தொகுதிகள் முடிவாகவில்லை. அப்படி ஏதும் தொகுதி முடிவாகி வேட்பாளர் என்று அறிவித்தால் முதன் முதலில் திண்டுக்கல் வந்து பத்திரிக்கையாளர்களாகிய உங்களைத்தான் முதன் முதலில் சந்தித்து என்று கூறினார்!
 

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.