Published on 15/11/2018 | Edited on 15/11/2018

கஜா புயலின் காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதே போல் நாளை நடைபெறுவதாக இருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.