Skip to main content

பிஸியோதெரபிஸ்ட்கள் டாக்டர்கள் இல்லையா? - இயன்முறை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Published on 20/04/2018 | Edited on 20/04/2018

பிஸியோதெரபிஸ்ட்கள் எனப்படும் இயன்முறை மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னாள் டாக்டர் என்று போட்டுக்கொள்ளக்கூடாது என்று இந்திய மருத்துவக்கவுன்சில் தொடர்ந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

2008ஆம் ஆண்டு வெளியான ஓர் அரசாணையை அடிப்படையாய்க் கொண்டு மருத்துவர்களின் கவுன்சில் தொடர்ந்த வழக்கின், இந்தத் தீர்ப்பு சில அதிர்வலைகளை ஏற்படுத்தி அலோபதி மருத்துவர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு நடுவே பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. 

 

Pro

 

இந்நிலையில்,  இயன்முறை மருத்துவர் பெருமன்றம் சார்பில், ஈரோட்டில் 18.04.2018 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 800க்கும் அதிகமான இயன்முறை மருத்துவர்கள் மற்றும் இயன்முறை மருத்துவ மாணவர்கள்  தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்து பங்கேற்றனர். உணர்வுப்பூர்வமாக நடந்த இந்தப் போராட்டத்தை இயன்முறை மருத்துவப் பெருமன்றத்தின் தலைவர் வே.கிருஷ்ணகுமார், செயலாளர் சு.சுரேஷ், பொருளாளர் ரா.ராஜேஷ் மற்றும் ஈரோடு மாவட்ட பெருமன்ற பொறுப்பாளர் ஆனந்த் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். 

 

இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது, மற்ற மருத்துவத்துறையினரின் தலையீடு இல்லாமல் பிசியோதெரபி சம்பந்தப்பட்ட கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். 
தமிழக சுகாதார துறையால் கொண்டுவர இருக்கின்ற மருத்துவமனை ஒழுங்கு முறை சட்டத்தில் பிசியோதெரபி கிளினிக்குகளை ஒழுங்குபடுத்த உருவாக்க உள்ள சட்டதிட்டங்களை வரையறுக்க, பிசியோதெரபி மருத்துவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். 

 

பிசியோதெரபி துறையை தனித்துறையாக அங்கீகரிக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இலவச பிசியோதெரபி சேவை கிடைக்க ஆரம்ப சுகாதார நிலையம் முதல் புதிய பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும். மேற்சொன்ன கோரிக்கைகளை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிசியோதெரபி படிப்பின் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சார்ந்த செய்திகள்

Next Story

பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Physiotherapist doctors struggle in Trichy

பிசியோதெரபிஸ்ட் கிளினிக் தொடங்கி நடத்த குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயித்து அரசாணை ஒன்றை வெளியிட வேண்டும். சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களில் உள்ளவாறு மத்திய - மாநில அரசுத் திட்டங்களில் பணியாற்றும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு குறைந்தபட்ச தொகுப்பூதியமாக ரூ. 35 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு இயன்முறை மருத்துவக் கல்லூரி பெயர்ப் பலகைகளில் இடம் பெற்றுள்ள சிகிச்சை என்ற வடமொழிச் சொல்லை உடனடியாக மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் செயல்படும் பிசியோதெரபி கல்லூரிகளின் பெயர்ப் பலகைகளில் மருத்துவ இயன்முறை மருத்துவக் கல்லூரி எனத் தமிழில் அழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அறிவுறுத்தி ‘தி இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கம்’ சார்பில் திருச்சி ஜங்ஷனில் மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் பூர்ணிமா, இணை செயலாளர் ரமேஷ் குமார், ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், டாக்டர்கள் ராஜ்குமார், பிரகாஷ், பாண்டுரங்கன், சரவணன், ஸ்ரீதர், கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி.-க்கு இடஒதுக்கீடு அளிக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும்! –இந்திய மருத்துவ கவுன்சில் வாதம்!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

Medical study

 

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழக அரசு, தி.மு.க., பா.ம.க., தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை ஜூலை 27-ஆம் தேதிக்குத் ள்ளிவைத்துள்ளது.

 

இந்நிலையில், இந்த வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்பும்போது, அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும், பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அந்த இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதாகவும், மருத்துவ கவுன்சிலின் எழுத்துப்பூர்வமான வாதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல், மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.