Skip to main content

தொண்டியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
தொண்டியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

திருவாடானை தாலுகா தொண்டியில் மின்சார வாரியத்திற்குட்பட்ட பணிகளை செய்து வந்தவர் முகிழ்தகம் ஏசுபுரத்தைச் சேர்ந்த அருள் மகன் செல்வமாதவன்(25). இவர் வழக்கம்போல் தொண்டி மணல் தெருவில் மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்து காயம்பட்டவரை ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லும் போது வழியில் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் இவர் மின்சாரம் தடை பட்டாலோ அல்லது வீடுகளில் மின்பாதிப்பு ஏற்பட்டாலோ இவர்தான் பல ஆண்டுகளாக சரி செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மின்சாரம் தாக்கியதில் பலியானார். இது குறித்து மின்சார வாரியத்தில் அதிகாரிகளை கேட்ட பொது இறந்தவர் யார்யென்றே தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இறந்தவரின் தந்தை அருள்(55) கொடுத்த புகாரின் பேரில் தொண்டி காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

-பாலாஜி

சார்ந்த செய்திகள்