Skip to main content

“இடைத்தேர்தல் முடிந்த உடனே பகுதி நேர ரேஷன் கடைகள் கொண்டுவரப்படும்” - எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில் குமார்

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
 Partial narration shops will be brought soon after by-elections says MLA Senthil Kumar

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சோழாம்பூண்டி, சோழனூர் பகுதியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார்  தீவிரமாக பிரச்சாரம் செய்து வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது சோழாம்பூண்டியைச் சேர்ந்த தொகுதி மக்களை சந்தித்து வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து வாக்கு சேகரித்தார். 

 Partial narration shops will be brought soon after by-elections says MLA Senthil Kumar

அதன் பின் பொதுமக்கள் மத்தியில் ஐ.பி.செந்தில்குமார் பேசும் போது, “இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த புகழேந்தி சட்டமன்றதத்தில் உரையாற்றும்போது தனது தொகுதிக்குட்பட்ட சோழனூர், சோழாம்பூண்டி பகுதிக்கு பகுதிநேர ரேஷன்கடை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பின்னர் அவர் காலமானதால் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். திமுக மாநில துணை பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களுடன் பிரச்சாரத்திற்கு வந்தபோது இப்பகுதி மக்களிடம் அவர்கள் சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு பொதுமக்களின் கோரிக்கையான பகுதிநேர ரேஷன்கடை, பொது கழிப்பறை வசதி, பேருந்து நிழற்குடை வசதி, வேண்டுமென கேட்டுள்ளனர். அவரும் இடைத்தேர்தல் முடிந்த பின்பு நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். 

அவர் வாக்குறுதி அளித்தபடி பகுதி நேர ரேஷன் கடை உட்பட அனைத்து கோரிக்கைகளும் இடைத்தேர்தல் முடிந்தபின்பு உடனடியாக நிறை வேற்றப்படும். அதுபோல் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு நூறு நாள் வேலை கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதைத் தொடர்ந்து தான் 400 பேருக்கு 300 ரூபாய் சம்பளத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

 Partial narration shops will be brought soon after by-elections says MLA Senthil Kumar

இதில் மாவட்டத் துணைச் செயலாளர்கள். நாகராஜன், பிலால் உசேன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன், மாவட்ட துணைச் சேர்மன் விஜயன், திண்டுக்கல் துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன், திண்டுக்கல் பகுதி செயலாளர்களான கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், மேற்கு பகுதி செயலாளர் அக்கு, தெற்கு பகுதி செயலாளர் சந்திர சேகர், கவுன்சிலர் ஜான் பீட்டர் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கிராமங்கள்தோறும் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிக் கொடுக்கப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Basic facilities will be provided in every village in Vikravandi  says Minister I. Periyasamy

விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக்குட்பட்ட சோழாம்பூண்டி, சோழனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட அயினாம்பாளையம், பெரியார்நகர், முத்தியால்பேட்டை, தென்னம்மாதேவி, பூத்தமேடு மாரியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு, காட்டு நாயக்கன் தெரு, ஆதிதிராவிடர் காலனி உட்பட பல கிராமங்களுக்கு நடந்து சென்று பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவு மற்றும்  உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியும் ஆகியோர்  பொதுமக்களிடம் பேசியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 

அப்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “திமுக தலைவர் கலைஞர் வழியில் வந்த  மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் ஜாதிமத இன வேறுபாடின்றி அனைத்து  நலத்திட்டங்களும் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைந்து வருகிறது. முதல்வரின்  கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் கிராமப்புறங்களை நகரங்களுடன் இணைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டதால் கிராமப்புற மக்கள் எளிதாக அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல முடிகிறது. போக்குவரத்து வசதி கிராமப்புறங்களுக்கு கிடைப்பதோடு கிராமப்புறங்களில் விளைவிக்கப்படும் விவசாயிகளின் விளைபொருட்கள் எளிதாக நகரங்களுக்கு கொண்டு சென்று  விற்பனை செய்ய முடிகிறது.

Basic facilities will be provided in every village in Vikravandi  says Minister I. Periyasamy

இங்கு என்னுடன் பிரச்சாரத்திற்கு அமைச்சர் அர.சக்கரபாணியும் வந்துள்ளார். நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்களிடம் கோரிக்கை வைத்த பேருந்து நிறுத்த வசதி, பொதுக்கழிப்பறை வசதி, சாலை வசதிகள் தங்கு தடையின்றி குடிதண்ணீர் வசதி கிடைக்க உட்பட அனைத்தும் தேர்தல் முடிந்தபின்பு படிப்படியாக நிறைவேற்றப்படும். பொதுமக்களின் முக்கியமான கோரிக்கையான பகுதிநேர நியாயவிலைக்கடை உடனடியாக அமைத்துக் கொடுக்கப்படும். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா தொகுதி மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வதின் மூலம் உங்கள் கிராமங்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் எளிதாக வந்தடையும்.” என்று கூறினார். 

தேர்தல் பிரச்சாரத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.நாகராஜன், மார்கிரேட்மேரி, பிலால் உசேன், பொருளாளர் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் சாணார்பட்டி விஜயன், கோலியனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் க.மும்மூர்த்தி, சோழாம்பூண்டி ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், தெய்வசிகாமணி, திண்டுக்கல் மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா, திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய திமுக செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் முருகேசன், நத்தம் பேரூராட்சி மன்றதலைவர் சிக்கந்தர் பாட்சா அகரம் பேரூராட்சி மன்றதலைவர் நந்தகோபால் உட்பட கட்சிபொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story

'திக்கற்ற காட்டில் நின்றபோது கை கொடுத்துத் தூக்கிவிட்டவர் கலைஞர்' - திருமாவளவன் பேச்சு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Thirumavalavan

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள நேமூர் என்ற இடத்தில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மூர்த்தி ஆகியோருடன் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது திருமாவளவன் பேசுகையில், 'திக்கற்ற காட்டில் விட்டதைப் போல் அரசியல் களத்தில், தேர்தல் களத்தில் நாம் நின்று கொண்டிருந்த பொழுது நமக்கு கை கொடுத்து தூக்கி நிறுத்தியவர் கலைஞர். அதிமுக அப்பொழுது நம்மை கண்டு கொள்ளவில்லை. ஒப்பந்தம் முறிந்து போனது. சந்திப்பதற்கு கூட ஜெயலலிதா அம்மையார் உடன்படவில்லை. நானும் ரவிக்குமாரும் போயஸ் தோட்டத்திற்கு போய் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து விரக்தியில் வெளியேறிய நிலையில் அந்த தகவலை அறிந்த கலைஞர் தொலைப்பேசியில் என்னை அழைத்து அரவணைத்துக் கொண்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 8 சதவீத ஓட்டு வாங்கி காட்டிய பிறகுதான் அதிமுக கூட்டணியில் சேர முடிந்தது. விடுதலை சிறுத்தைகள் அப்படி தனித்துப் போட்டியிடவில்லை; எத்தனை சதவீதம் வாக்கு வங்கி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவில்லை; தமிழ்நாடு முழுக்க நாம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை ஆனாலும் கலைஞர் 2009-இல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை கொடுத்தார். இரண்டு நாடாளுமன்றத் தொகுதி என்பது 12 தொகுதிகள். இதெல்லாம் சாதாரணமான ஒரு முடிவல்ல. இதெல்லாம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கிடைக்கும் வாய்ப்பு கிடையாது. எல்லோரும் தனது சொந்தக் காலில் நின்று குட்டிக்கரணம் போட்டு சாதித்து காட்டிய பிறகுதான் இந்த 20, 30 ஆண்டுகளில் கூட்டணியிலேயே சேர முடிந்தது. அது மட்டுமில்லாமல் நாங்கள் தனிச் சின்னத்தில் நின்று அங்கீகாரம் பெற விரும்புகிறோம் என்று சொன்னபோது அதற்கும் வாழ்த்து சொன்னவர் கலைஞர்'' என்றார்.