Skip to main content

முன்பதிவில்லா பெட்டியில் துணை ராணுவப்படை செய்த அட்டூழியம்; துப்பாக்கியை வைத்து மிரட்டல்

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
 Paramilitary forces committed atrocity in unbooked box; Threats with a firearm

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகளை துணை ராணுவ படையினர் மிரட்டிய சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் சுமார் 20க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் ஏறினர். அங்கிருந்த பயணிகளிடம் தாங்கள் பணிகளை முடித்துவிட்டு திரும்புவதால் தங்களுக்காக இந்த முன்பதிவில்லாத பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது எனவே இடம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் ரயில் கிளம்பிய உடன் மது அருந்திய துணை ராணுவ படையினர், சீட்டு விளையாடுவதோடு அதிக கூச்சல் எழுப்பி அங்கிருந்த பயணிகளுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அங்கிருந்த பயணிகள் சிலர் தட்டி கேட்டபோது அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  துணை ராணுவத்தினர் மதுபோதையில் துப்பாக்கியை எடுத்துக்காட்டி மிரட்டியதாகவும், ஒருவரை காலணியால் அடித்து தாக்கியதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது பயணிகள் அவசர செயினை இழுத்து ரயிலை நிறுத்தினர். அதன் பின்னர் கீழே இறங்கிய பணிகள் இது குறித்து கேட்ட பொழுது துணை இராணுவத்தினர் அங்கிருந்த பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு கையிலிருந்த மது பாட்டில், காலணி ஆகியவற்றைக் கொண்டு தாக்க முற்பட்டனர். இதில் இரண்டு பயணிகள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. மக்களை காக்க கூடிய ராணுவ வீரர்களே இப்படி பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரவுடிகள் பட்டாக்கத்தியுடன் நடனமாடி ரகளை; சிக்கிய சிசிடிவி காட்சிகள்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
cannabis intoxicated raiders rampage near Chennai

சென்னை மணலி சாத்தாங்காடு பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய ரவுடி கும்பல் ஒன்று கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பட்டாகத்தியுடன் சாலையில் நடனமாடி ரகளையில் ஈடுபட்டனர். அத்தோடு, ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவன் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை தூக்கிச் சென்று தங்களுடன் நடனம் ஆடுமாறு மிரட்டியதால் அந்தச் சிறுவன்  கும்பலிடம் இருந்து தப்பி தலைத் தெறிக்க வீட்டிற்கு ஓடி உள்ளான்.

மேலும் போதைத் தலைக்கேறிய நிலையில் ரவுடி கும்பல் அவ்வழியாக வந்த இரு சக்கர ஊர்திகளில் செல்படுபவர்களை வழிமறித்து அவர்களை வாகனத்தில் இருந்து கீழே இறக்கி கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரவுடிகள் நடத்திய அராஜகத்தால் அப்பகுதியே பதட்டத்திற்கு உள்ளாகி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து மணலி சாத்தாங்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த நிலையில் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதின் மூலம் சமூக விரோதிகளின் குற்றச் செயல்களும் அதிகரித்து வருகிறது, இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், அரசும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் கஞ்சா சாகுபடி செய்யவும் சமூக விரோதிகள் தயங்க மாட்டார்கள் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Next Story

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
ADMK legislators fast

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?. கள்ளச்சாராய மரணங்கள் 60ஐ தாண்டியுள்ள நிலையில், இன்று வரை கள்ளக்குறிச்சி சென்று மக்களைச் சந்திக்காதது ஏன்?. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.