Published on 15/10/2018 | Edited on 15/10/2018

தமிழியக்கம் விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்மொழி குறித்தும், தமிழர்கள் குறித்தும் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது,
உலகில் 6,760 மொழிகள் பேசி வருகிறார்கள், நம்நாட்டில் 1,562 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. திராவிட மொழி குடும்பம் மிகவும் பழமையானது. அதிலும் தனிச்சிறப்பு கொண்ட தொன்மையான மொழி தமிழ். தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை தந்து தமிழ்வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா. தமிழ் இயக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்டமாக அரசு துணை நிற்கும்.