Skip to main content

கஜாபுயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமம் மட்டுமே பாதிப்பு; மீண்டும் பதட்டத்தை பற்றவைக்கும் அமைச்சர் ஒ.எஸ்.மணியன்

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

நாகையில் கஜா புயல் பாதித்த 181 கிராமங்களுக்கு மட்டுமே அரசின் நிவாரண சலுகைகள் பொருந்தும் என அமைச்சர் ஒ.எஸ்.மணியன் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் எரிச்சலை மூட்டியுள்ளது.

 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கிராமத்தில் பல ஆண்டுகாலமாக பழுதடைந்திருந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதிதாக கட்டுவதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டுமான பணியை பூமி பூஜை செய்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். அப்போது கீழையூர் கிராமத்தில் கஜா புயலால் உயிரிழந்த  3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் காசோலையை அமைச்சர் மணியன் வழங்கினார். 

 

Only 181 villages in Nagapattinam district have been affected by Kajapalai; Minister OMMayan has been refusing to get tense again

 

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன்," கஜா புயல் பாதித்த பகுதிகளில் 95% நிவாரண பணிகள் முடிந்துவிட்டது,  கஜா புயல் பாதித்த பகுதிகளில் வீடுகளை இழந்து நிற்கும் அனைவருக்கம் நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும். பட்டா வைத்திருப்பவர்கள், கோவில் நிலத்தில் குடியிருந்தவர்கள் அனைவருக்கும் நிரந்தர வீடுகள் கட்டாயம் கட்டித்தரப்படும். குடிசை இல்லா டெல்டாவை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும்  தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது."என்றார்.

 

நிவாரணம் கேட்டு பொதுமக்கள் இன்னும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்களே என கேட்டபோது, "கஜா புயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் பொருந்தும். என்றார் திட்டவட்டமாக.

 

கஜாபுயல் நிவாரணம் கிடைக்காமல் பல கிராமத்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் ஒ.எஸ்.மணியனின் பேச்சு பலதரப்பட்ட மக்களையும் எரிச்சல் அடையசெய்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'நாங்க என்ன வானத்துல இருந்தா குதிச்சோம்' - அத்திப்பட்டியான சோளப்பட்டி

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
'Whatever sky we jumped from'-solapatti people struggle

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ளது மஞ்சாராஹள்ளி ஊராட்சி. அங்கு டி.சோளப்பட்டி எனும் குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நில பட்டாக்கள் தொடர்பான எந்த ஒரு தகவலும் 1929 ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய நிலங்களை மாற்று நபருக்கு விற்கவோ அல்லது புது நிலங்களை வாங்கவோ முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களுடைய கிராமம் தொடர்பான ஆவணங்களைப் பதிய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்ட வீடியோக்களில், 'எங்க பெரியவங்க எல்லாம் ஆண்டுட்டு போயிட்டாங்க. நாங்க நிலத்தை யாருக்கும் விக்க முடியல. நிலத்தை வாங்கவும் முடியல. தர்மபுரிக்கு போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, பென்னாகரம் போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, மேச்சேரி போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க, சேலம் போனாலும் பதிவில்லைன்னு சொல்றாங்க. ஏன் எங்களுக்கு மட்டும் பதிவாகவில்லை. நாங்க என்ன வானத்தில் இருந்தா குதிச்சோம். கவர்மெண்ட் எங்களுக்கு மட்டும்  ஏன் பதிவு செய்யாமல் விட்டது. ஓட்டு கேட்க மட்டும் வரீங்க, எங்களுக்கு போடுங்க.... எங்களுக்கு போடுங்க... என்று. ஏன் எங்களின் இடத்தை பதிவு பண்ணக்கூடாது. பதிவு பண்ணி குடுங்க' எனத் தெரிவித்துள்ளனர்.