Skip to main content

ஆன்லைனில் போலி கிமியா பேரீச்சம்பழம் விற்றவர்கள் கைது!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018

மும்பையை தலைமையிடமாக கொண்ட சீமா டிரேடர்ஸ் என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழங்களை பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். கிமியா டேட்ஸ் பேரீச்சம்பழத்தின் தமிழக விற்பனை பிரதிநிதியாக மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஜாவேத்ரஷா என்பவர் உள்ளார். இந்த நிலையில் திருச்சி தஞ்சைரோட்டில் உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாலப்பேட்டையில் உள்ள நேசம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆன்லைனில் கிமியா டேட்ஸ் பேரீச்சம்பழத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளது.

 

 dates

 

 

இந்த விளம்பரத்தை பார்த்த ஜாவேத்ரஷா நம்முடைய பேரீச்சம்பழங்களை நம்முடைய விலையை விட குறைவாக எப்படி இவர்களால் விற்பனை செய்ய முடியும் என்று சந்தேகம் அடைந்து நேரடியாக திருச்சிக்கு வந்து திருவெறும்பூர் டி.எஸ்.பி சேகரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த துவாக்குடி காவல் ஆய்வாளர் அழகம்மாளிடம் உத்தரவிட்டுள்ளார். 

 

DATES

 

இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அழகம்மாள் ஆலோசனைப்படி ஜாவேத்ரஷா தஞ்சையிலிருந்து பேசுவதாகவும், தனக்கு கிமியாடேட்ஸ் பேரீச்சம்பழம் 50 பாக்ஸ் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்துள்ளார். எங்கு வந்து வாங்கிக்கொள்வது என்று கேட்டவுடன் துவாக்குடி அருகே உள்ள குடோனில் இருப்பதாக சொல்லி வர சொல்லியிருக்கிறது அந்த கும்பல். அங்கே சென்று பார்த்த ஜாவேத்ரஷா கிமியா டேட்ஸ் பேரீச்சம்பழம் போலியாக தயாரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர் உடனே காவல் ஆய்வாளர் அழகம்மாளுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். 

 

 dates

 

ஏற்கனவே தயாராக இருந்த காவல் ஆய்வாளர் உடனே தன்னுடைய போலிஸ் படையுடன் குடோனுக்கு சென்றபோது நேசம் எண்டர்பிரைசஸ் ஆம்னி வேனில் டிரைவர் இர்பான் போலி கிமியா டேட்ஸ் பேரீச்சம்பழ பெட்டிகளை ஏற்றிக்கொண்டிருந்திருக்கிறார். அவரை மடக்கிபிடித்து போலிஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்ததில். இர்பானின் சொந்த ஊர் காரைக்குடி என்றும் தன் தாயும் பத்தாலபேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும் சொல்லி தொடர்ந்து கொடுத்த வாக்குமூலத்தில் திருச்சி ரோட்டில் உள்ள பாபு டிரேடர்ஸ் மற்றும் காந்திமார்கெட் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள பேரீச்சம் பழங்களை வாங்கி டெலிவரி செய்வதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

 

இவருடைய பின்னணியில் உள்ள அப்பு டிரேடர்ஸ் நிர்வாகி முத்துகுமார், மற்றும் அக்ஷியா பேக்கரி நிர்வாகி கருப்பையா மற்றும் இர்பான், இவர்களோடு 380 பாக்ஸ் போலி பேரீச்சம் பழங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.