Skip to main content

டிராக்டர் சுத்தம் செய்தபோது விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
 One person lose their live in an accident while the tractor was cleaning

ஈரோட்டில் டிராக்டர் சுத்தம் செய்தபோது விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கதிரம்பட்டி, சூர்யா நகர், ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி பர்வதம். இவர்களது மகன் சண்முகசுந்தரம் (43). இவர் இரண்டு ஜே.சி.பி மற்றும் ஒரு டிராக்டர் சொந்தமாக வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். சண்முகசுந்தரத்துக்கு திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 மாதமாக அவரது மனைவி அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சண்முகசுந்தரம்  வீட்டுக்கு மேற்புறம் உள்ள காலியிடத்தில் நிறுத்தியுள்ள டிராக்டர் மற்றும் ட்ரெய்லரை சுத்தம் செய்துவிட்டு வருவதாகச்  அவரது தாயிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் சண்முகசுந்தரத்தின் தந்தை அந்த வழியாக வரும்போது மேற்படி சண்முகசுந்தரம் ட்ரெய்லருக்கு அடியில் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி மனைவியிடம் தான் மருத்துவமனைக்கு போக வேண்டும், மகனை வரச்சொல் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பர்வதம் மகனைத் தேடி சென்றுள்ளார்.  

சம்பவ இடத்துக்குப் போய் பார்க்கும்போது சண்முகசுந்தரம் டிராக்டருக்கும், ட்ரெய்லருக்கும் இடையில் தலை சிக்கிக் கொண்டிருந்ததாக சத்தம் போட, அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து டிராக்டரை ஸ்டார்ட் செய்து டிரெய்லரைத் தூக்கி சண்முகசுந்தரத்தை வெளியில் எடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் சண்முகசுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.