Skip to main content

தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Old woman incident by pillow; Police investigation

திருப்பத்தூரில் தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பலப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அனுமக்கா (82). கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூதாட்டி அனுமக்கா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச் சென்றவர் காலையில் வீட்டில் இருந்து வெளியில் வராததால் அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் சென்று பார்த்த போது, மூதாட்டி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தலையணை அமுக்கி வைக்கப்பட்டு இறந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும்  வேலூர் சாரா மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றவியல் போலீசார் மற்றும் ஆலங்காயம் காவல்துறையினர் தடயங்களைக் கைப்பற்றி சந்தேகத்தின் பேரில் மூதாட்டியின் உறவினர்கள் ஆறு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து கைரேகை பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி 4 சவரன் நகைகள் அணிந்திருந்ததாக கூறப்படும் நிலையில் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலங்காயம் அருகே மூதாட்டி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மனைவியை கத்தியால் குத்திய கணவன்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Husband stabs wife in Tiruppathur

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அடுத்த கல்லுகுட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாசம் மகன் பிரவீன் (32). இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகள் நந்தினி (28) என்பவருக்கும் பிரவீனுக்கும் திருமணம் நடைபெற்று குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவனிடமிருந்து பிரிந்து நந்தினி தனது அம்மா வீட்டில் தங்கி திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டையில் இயங்கும் ஸ்ரீராம் பைனான்ஸில் டாக்குமெண்ட் ஸ்டாப்பாக வேலையும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவன் பலமுறை தனது மனைவியை தன்னுடன் வாழ அழைத்தும் வராத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரவீன், மனைவி வேலை செய்யும் இடத்திற்கே சென்று தனது மனைவியை தனியாக அழைத்து தன்னிடம் வர அழைத்துள்ளார். ஆனால், மனைவி வர மறுத்து அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமானவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவின் உடம்பில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இதனால் மனைவி அலறி உள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு நந்தினியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தன் மனைவியை குத்தியதால் கணவன் பிரவீனுக்கும் கையில் காயம் ஏற்பட்டதால் அங்கேயே அமர்ந்திருந்தார். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் பிரவினை அழைத்து வந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்தனர். கருத்து வேறுபாடு காரணத்தால் கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சேலத்தில் சக்கை போடு போடும் போதை மாத்திரை கும்பல்; பிடிபட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Salem addiction pills

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள், உடல்  உழைப்புத் தொழிலாளர்கள் கள், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட மாற்று போதைப் பொருட்களைத் தேடிச்செல்கின்றனர். குறிப்பாகச் சேலத்தில் இளைஞர்கள் அண்மைக் காலமாக போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. தூக்க மாத்திரைகள், ஆல்கஹால் அதிகமுள்ள சிரப் வகை  மருந்துகள், வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும் விதிகளை மீறி சில மருந்துக் கடைகளில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு  வருவது தொடர்கிறது.

மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மருந்து கடைகளில் சோதனை நடத்தி, விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும்,  இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்நிலையில், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் நான்கு சாலை பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சேலம் செவ்வாய்ப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(22),  தட்சணாமூர்த்தி(22), வீரபாண்டி ராஜ வீதியைச் சேர்ந்த அர்ஜூனன்(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள், நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள மருந்து விற்பனை பிரதிநிதிகள் சிலரிடம் நேரடியாக வலி நிவாரணி மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி போதைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றைக்  கூலித்தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனையும் செய்துள்ளனர். பத்து  மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 100 ரூபாய்க்கு வாங்கி, அதை 200 ரூபாய்க்கு விற்று வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900  மாத்திரைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப் பிறகு, சேலம் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் குறித்தும், பிடிபட்ட இளைஞர்களுடன்  வேறு யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர். இளைஞர்களின் புதிய போதைக் கலாச்சாரம், சேலம் மக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி  உள்ளது.