Published on 27/05/2019 | Edited on 27/05/2019
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி முதல் காவேரிப்பாக்கம் வரை பாலாற்றில் மணல் தினம் தினம் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், லாரிகள், டிப்பர்களில் கடத்தப்படுகின்றன. இதனை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, காவல்துறை என எந்த துறை அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை. இவர்களுக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை என இப்பகுதி பொதுமக்களின் குற்றச்சாட்டு. இந்நிலையில் மணல் கடத்தலை தடுக்கவும், கடத்தல்காரர்களை பிடிக்க எஸ்.பி பர்வேஷ்குமார் தலைமையில் சிறப்பு படை ஏ.டி.எஸ்.பி பாலசுப்பிரமணி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

