Skip to main content

அதிமுக தோல்வி நிலையால் கூட்டுறவு தொழிற்சங்க தேர்தலை ரத்து செய்த அதிகாரிகள்!  

Published on 28/04/2018 | Edited on 28/04/2018


 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்காக இன்கோசர்வ் சொசைட்டி உள்ளது. இந்த சங்கத்தில் என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் இன்கோசர்வ் ஒப்பந்த தொழிலாளர்கள் 3994 பேர் உள்ளனர். இந்த சங்கத்திற்கான இயக்குனர்கள் தேர்தல் வெள்ளிக்கிழமை நெய்வேலி வட்டம் 9-ல் உள்ள நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேட்சைகள் என 113 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் 11 நபர் சங்கத்தின் இயக்குனர்களாக நியமிக்கப்படுவர்.
 

காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தலில் மதியம் 2.00 மணியளவில் சுமார் 1500 வாக்குகளே பதிவாகியிருந்தது. ஆனால் அதிலும் 5% கூட ஆளும் அ.தி.மு.கவுக்கு ஆதரவான நிலை இல்லை என தெரிய வந்தது. 
 

மாநிலம் முழுக்க ஆளுங்கட்சி என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி அ.தி.மு.கவினர் மூலம் கூட்டுறவு சங்கங்களை கைப்பற்றி வரும் அ.தி.மு.கவால்  தொழிலாளர்கள் நிறைந்த என்.எல்.சி கூட்டுறவு சங்கத்தில் 5% வாக்குகளை பெற முடியாது என்பதால் காவல் துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் கூட்டு சேர்ந்து குழப்பம் விளைவித்தனர்.  
 

2.30 மணியளவில் தேர்தல் அலுவலர் உத்திரமூர்த்தி தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார். ஆளும்கட்சிக்கு ஆதரவாகவே தேர்தலை நிறுத்த அதிகாரிகள் சதி செய்வதாக கூறி திமுக, பா.ம.க, த.வா.க, கம்யூனிஸ்ட், வி.சி உள்ளிட்ட கட்சிகளின்  தொழிற்சங்கத்தினர் வாக்குவாதத்திலும் போராட்டத்திலும்  ஈடு்பட்டனர்.

இரண்டாவது ஷிப்ட் பணி முடித்துவிட்டு வாக்களிக்க வந்த ஆயிரத்திற்கும. மேற்பட்டவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
 

மாலை 6 மணியளவில் தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் விதிகளின்படி என்.எல்.சி., இன்சோகேர்வ் தேர்தல் நிறுத்தப்படுவதாகவும். தேர்தல் ஆணையத்தின் மறு அறிவிப்பு கிடைத்தப்பின் மறு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்,என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 
 

இந்நிலையில் தேர்தல் அதிகாரிகளின் முறைகேடுகளை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.