18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்த தங்கதமிழ்செல்வனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் சம்மன் அனுப்பியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். அதனால், 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவுச் செல்லும் என்றும், சபாநாயகரின் உத்தரவுச் செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தங்கத்தமிழ்ச்செல்வன் ஊடகங்களின் அளித்த பேட்டியின் போதும், விவாதத்தின் போது பணம் பெற்று தீர்ப்பு வழங்கியதாக சென்னை உயர் நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சித்தார். இதனால் அவர் மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஸ்ரீமதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஸ்ரீமதி தொடர்ந்த வழக்கில் பேரில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன் தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
அதில், சென்னை உயர்நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சித்தது குறித்து நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும். அவ்வாறு தங்கத்தமிழ்செல்வன் அளிக்கும் விளக்கத்தில் திருப்தி இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடர நீதிமன்றத்திற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பரிந்துரைப்பார் என நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை விமர்சித்த தங்கதமிழ்செல்வனுக்கு நோட்டீஸ்!
சார்ந்த செய்திகள்
Next Story
தங்கதமிழ்ச்செல்வனின் தென்னந்தோப்பை சேதப்படுத்திய அரிக்கொம்பன்
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து தமிழக எல்லையான குமுளி வழியாக கம்பத்திற்குள் நுழைந்த அரிக்கொம்பன் என்ற அரிசி கொம்பன் யானை, நகரில் பல பகுதிகளுக்குள் நுழைந்து மக்களை விரட்டியதில் மக்கள் பதறியடித்துக் கொண்டு வீடுகளுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர்.
இந்த விஷயம் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தெரியவே அரிக்கொம்பனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். ஆனால் அரிக்கொம்பன் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி வழியாக சென்று சுருளி மலைப்பகுதிக்குள் தஞ்சமடைந்தது. அதைத் தொடர்ந்து அரிக்கொம்பனை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்படியிருந்தும் அரிக்கொம்பனை பிடிக்க முடியவில்லை. ஆனால் சுருளிமலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் அப்பகுதியில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கதமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்குள் நுழைந்து அங்கிருந்த 300 தென்னை மரங்களை வேரோடு சாய்த்து அழித்திருக்கிறது.
அதை கேள்விப்பட்ட தங்கதமிழ்செல்வன் மனம் நொந்துபோய்விட்டார். இரண்டு வருடங்களாக தென்னங்கன்றுகளை காட்டுப்பன்றியிடம் இருந்து காப்பாற்றி அதை வளர்த்து மரமாக்கி இன்னும் சில மாதங்களில் காய் கோர்க்கும் நேரத்தில் இப்படி தென்னை மரங்களை அக்கொம்பன் சேதப்படுத்திவிட்டது. ஒரு சில தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் சேதப்படுத்திக் கொண்டு மலைப்பகுதிக்குள் அரிக்கொம்பன் தஞ்சமடைந்து வருகிறதே தவிர இன்னும் வனத்துறையினர் பிடிக்க முடியவில்லை.
Next Story
“பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுத்து ஏமாற்றிய ஓ.பி.எஸ்..” - தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் நிருபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்ற திட்டத்தை முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்தார். அதன் அடிப்படையில், முதன்முதலில் மதுரையில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு மாட்டுத்தாவணி அருகிலையே இடம் ஒதுக்கி வீட்டுமனை பட்டாவையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் பல மாவட்டங்களில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை வழங்கப்பட்டது.
அதன் பின் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஒபிஎஸ் ஆகியோர், விடுபட்டுபோன வீட்டுமனை பட்டா கேட்டு பல மாவட்டங்களில் உள்ள பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி முதல்வர் எடப்பாடி தமிழக மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருக்கிறார். அதுபோல், பத்திரிகையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து சேலம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டும் இருக்கிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் கடந்த 20 வருடங்களாக வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து போராடி வந்தனர். ஆனால், அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்துவரும் ஓ.பி.எஸ். தனது மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வாங்கி கொடுக்க ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். அதைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் குதிக்கத் தயாராகிவந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி வீரபாண்டி அருகே புல எண் 1591-ன் படி, 0.83.0 ஹெக்டர் பஞ்சமி நிலத்தை நத்தமாக மாற்றி 53 பத்திரிகையாளர்களுக்கு (அதுவும் தலா இரண்டரை செண்ட் இடம்) முதல் கட்டமாக வீட்டுமனை பட்டா கொடுக்க அரசு ஆணை (எண் 638) கடந்த 12.11. 2020 தேதி தேதி போடப்பட்டது. ஆனால், அந்த அரசாணையில் இந்த இடம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அதனுடைய இரண்டு வழக்குகள் (வழக்கு எண் 18882/2019-- (2525/2021) மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு தீர்ப்பு வரும்வரை பயனாளிகள் யாரும் அந்த இடத்தில் உள்ளே நுழையக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படி பிரச்சனைக்குரிய இடத்திற்கான அரசு ஆணையைத்தான், வீட்டுமனை பட்டா எனக்கூறி தேர்வு செய்யப்பட்ட 53 பத்திரிக்கையாளர்களை அழைத்து கடந்த 18ஆம் தேதி ஓ.பி.எஸ். கொடுத்திருக்கிறாரே தவிர, வீட்டுமனை பட்டா ஒன்றும் கொடுக்கவில்லை. இப்படி கோர்ட்டில் வழக்கில் உள்ள அந்த இடத்திற்கு தீர்வு காணாமல் அரசு ஆணையை மட்டும் ஓ.பி.எஸ். கொடுத்ததை கண்டு பத்திரிக்கையாளர்களும் ஒருபுறம் மனம் நொந்துபோய் இருக்கின்றனர். இந்த நிலையில்தான் தேனி மாவட்ட திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திடீரென பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசும்போது, “பத்திரிக்கையாளர்களுக்கு அ.தி.மு.க அரசு வீடு கட்ட இடம் கொடுத்ததாக கேள்விபட்டேன். ஏன் இவ்வளவு அவசரமாக கொடுத்தார்கள் என பார்க்கும்போது, இன்னும் இரண்டு மாசத்தில் தி.மு.க ஆட்சிக்கு வரப்போது.
அவங்கதான் பத்திரிக்கையாளர்களுக்கு இடம் கொடுக்கப்போறாங்க என்ற செய்தி ஓ.பி.எஸ் காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான், அவசர அவசரமாக இடம் கொடுத்திருக்காங்க. நம்ம மாவட்டத்தில் உள்ள 53 பத்திரிக்கையாளர்களுக்கு இடம் குடுத்திருக்காங்க. அதை நான் குறை சொல்லவில்லை. இதில் என்ன தவறு என்றால், அந்த இடத்திற்காக இரண்டு பேர் வழக்கு போட்டு, அந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நிலுவையில் இருக்கு. அப்படி வழக்கில் உள்ள ஒரு இடத்தைப் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கலாமா? சாதாரணமா மக்களுக்கு கொடுத்தாக்கூட அது தவறுதான்.
ஜனநாயகத்தின் நான்காம் தூணாக இருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கலாமா? பிரச்சனைக்குரிய அந்த இடம் வழக்கில் இருக்கும்போது முதலில் அரசு ஆணை போட்டது தவறு. வழக்கை முடித்துவிட்டு அரசு, ஆணை போட்டுப் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டாவாக வழங்கியிருக்க வேண்டும். அதுதான் விதிமுறையும் கூட. அதை விட்டுவிட்டு வழக்கில் இருப்பதை அரசு ஆணை போட்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்திருக்கும் அ.தி.மு.க அரசின் மூடத்தனமான இந்தச் செயல்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதுவும் துணை முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ். இப்படி செய்திருப்பது, பத்திரிக்கையாளர்களை ஏமாற்றியிருக்கிறார் என்றுதான் அர்த்தம். அதனால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நல்ல இடத்தைத் தேர்வு செய்து தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா கொடுப்பதுடன் மட்டுமல்லாமல் அந்த இடத்தில் வீடு கட்டியும் கொடுக்கப்படும்” என்று கூறினார்.