Skip to main content

கல்வி அமைச்சரிடம் சொல்லி பயனில்லை: களத்தில் இறங்கிய இளைஞர்கள்!

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

பள்ளி கல்வியை தரம் உயர்த்தி விட்டோம் தனியார் கல்வி நிறுவனங்களை விட அரசு பள்ளி கட்டிடங்கள் தரம் சீர்படுத்தப்படுகிறது. உள்கட்டமைப்புகள் சிறப்புற மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.  என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் செல்லுமிடமெல்லாம் பள்ளி கல்வித்துறை சாதனைகளை பட்டியலிட்டு வருகிறார். 

 

 


  Not to tell the Education Minister: Young people who are on the field!


 

ஆனால் அவரது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்திலிருந்து 20 கிலோ மீட்டரில் உள்ளது செண்பக புதூர் நடுப்பாளையம் இங்கு ஒரு தொடக்கப் பள்ளி உள்ளது அவ்வூர் மக்கள் " ஐயா இந்த பள்ளிக்கூடம் 1992ல் கட்டப்பட்டது. பில்டிங் ஸ்டாங்க இருந்தாலும் பெயின்ட் அடிக்காம பாழடைந்த கட்டிடம் போல உள்ளது. மொத்தம் ஐந்து வகுப்புகள் உள்ளது. ஆரம்பத்தில் 100, 200 குழந்தைகள் படித்தார்கள். பள்ளி கட்டிடத்தை பராமரிக்காமல் இப்போது இரண்டே இரண்டு மாணவர்கள் தான் படிக்கிறார்கள். கட்டிடத்தை புரணமைத்து பொழிவு செய்தால் இப்போது கூட ஐம்பது மாணவர்கள் இந்த அரசாங்க பள்ளியில் சேர்க்க நாங்க தயார்" என கல்வி அமைச்சரான செங்கோட்டையனுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள் மனு கொடுத்தனர். எந்த பதிலும் இல்லை. அமைச்சரின் சாதனை பேச்சு மைக்கிற்கும் மனுக்கள் குப்பையிலும் என உணர்ந்த அவ்வூர் இளைஞர்கள் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி மானவ மாணவியரை அழைத்து நாமே இதை புரணமைத்தால் என்ன என ஆலோசித்தனர். பெயின்ட் பொருட்கள் வாங்க 25 ஆயிரம் ரூபாய் ஊர் மக்களிடம் வசூல் செய்து மாணவர்களே களத்தில் இறங்கினார்கள் இரண்டே நாளில் கட்டிடம் புதுப்பொழிவு பெற்றது. அடுத்து மாணவர்கள் சேர்க்கை இப்போது 50 ஜ தாண்டி விட்டது இந்த மக்கள் பணிய முன்னின்று நடத்தியது கம்யூனிஸ்ட் தோழர்கள் என்பது குறிப்பிடதக்கது. 

 

 


  Not to tell the Education Minister: Young people who are on the field!

 

கல்வி அமைச்சரின் ஊரிலேயே ஒரு அரசுப் பள்ளியை அரசால் புதுப்பிக்க முடியவில்லை. அமைச்சர் செங்கோட்டையனுக்கு சாதனை செம்மல் (?) என்ற மற்றொரு பெயர் நீண்ட காலமாகவே ர.ர.க்களால் அழைக்கப்படுவதுண்டு.

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.