Skip to main content

பாஜக மட்டுமல்ல காங்கிரசும், திமுகவும் நீட் தேர்வை கொண்டுவர முயற்சி செய்தது: நிர்மலா சீதாராமன் தாக்கு!

Published on 09/06/2018 | Edited on 09/06/2018
nirmala


பாஜக மட்டுமல்ல காங்கிரசும், திமுகவும் நீட் தேர்வை கொண்டுவர முயற்சி செய்தது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன்,

நீட் தேர்வை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது தான். முந்தைய ஆளும் கட்சியாக (காங்கிரஸ்) இருக்கட்டும், தற்போதைய தமிழக எதிர்கட்சியாக (திமுக) இருக்கட்டும் எல்லோரும் சேர்ந்து நீண்ட நாட்களாக முயற்சி செய்தது தான் நீட் திட்டம். இது பாஜகவின் திட்டம் இல்லை.

வாஜ்பாய் அரசு எப்படி செயல்பட்டதோ, அதேபோல, மோடி அரசும் செயல்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளது.

போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக வெளியாகும் புகாரில் உண்மையில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் என்பது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதால், அதை தமிழக அரசு தான் கையாள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்