Skip to main content

என்.எல்.சி  மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 40 கிராம மக்கள்  கண்டன ஆர்ப்பாட்டம்! 

Published on 13/01/2019 | Edited on 13/01/2019
n

 

என்எல்சி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலம், புவனகிரி வட்டாரங்களில்  40 கிராமங்களிலுள்ள 12,125 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சித்து வருகிறது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், என்.எல்.சி நிர்வாகம் மற்றும்  மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

 

n

 

இந்நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தர்மநல்லூரில்  40 கிராம மக்கள், விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ஒன்று கூடி மத்திய, மாநில அரசை கண்டித்து  கண்டன முழக்கங்கள் எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது என்.எல்.சி நிறுவனம் முதல் இரண்டு சுரங்கத்திற்காக, கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கே உரிய இழப்பீடும், வேலையும்  வழங்காத போது மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு,  மாவட்ட நிர்வாகத்தின் முலம் நிலம் கையப்படுத்த முயற்சிப்பதை கண்டித்தும்,   மக்களின் வாழ்வாதரத்தை அழிக்க துடிக்கும் மத்திய அரசுக்கு, துணை போகும்  மாநில அரசை கண்டித்தும், என்.எல்.சி நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை  பொருட்படுத்தாமல் பேசிய தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை கண்டித்தும்  முழக்கங்கள் எழுப்பினர். 

 

n

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, " என்.எல்.சி நிறுவனம் வளமான பகுதியை கையகப்படுத்துவது கண்டிக்கதக்கது.  உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம்" என்றார்.   மேலும் மத்திய அரசு விவசாய நிலங்களை அழித்து , கார்ப்பரேட் நிறுவனத்தின் உதவியுடன் மரபணு விதையை கொண்டு வந்து, பல்வேறு நோய்களை உருவாக்கி விவசாயிகளை அழிக்க நினைக்கிறது.


வட மாநிலங்களில்  நிலக்கரி சுரங்கங்கள் வளமில்லாத பகுதிகளில்  இயங்கி வருகிறது. ஆனால் மத்திய அரசானது தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி சுரங்கம் அமைப்பதை ஒரு போதும் விட மாட்டோம்"  என்று எச்சரிக்கை விடுத்ததுடன்
"தமிழகத்தில் மீத்தேன் , ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் என பல்வேறு பிரச்சினைகளில் பொதுமக்கள் தீவிரமாக போரடி வருவது போல்,  என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். ஆதலால் 40 கிராமங்களிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுக்க விட மாட்டோம்" என்று ஆவேசத்துடன் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.