Skip to main content

அலட்சிய நகராட்சி... மூடாத பாதாளச் சாக்கடை குழியால் பெண் பலி..!!!!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019


காரைக்குடியில் நடைப்பெற்று வரும் பாதாளச்சாக்கடை பணிகளில் நகராட்சி அலட்சியம் காட்டியதின் விளைவாக, பள்ளி வாகனம் மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் பாதாளச்சாக்கடை பணியில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 

 Negligent municipality - sewer

 

ரூ.112 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதாளச்சாக்கடை திட்டப் பணி நடைப்பெற்று வருகின்றது. ஏறக்குறைய 31,725 வீடுகள் மற்றும் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ள இத்திட்டத்தில் தெருக்கள் தோறும் குறைந்தப்பட்சம் ஆட்கள் நுழையும் அளவிலான குழிகள் 5க்கு குறையாமலும், இணைப்புக்குழிகளும் தோண்டப்பட்டுள்ளன.

இப்படி தோண்டப்படும் குழிகள் முறையாக மறுபடியும் மூடப்பட்டுள்ளதா.? விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆய்வு செய்வதில்லை நகராட்சி நிர்வாகம் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உண்டு. இந்நிலையில், காரைக்குடி கழனிவாசலை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் தம்பதிகளான சண்முகம் - ரேவதி தங்களது பணிக்காக, தங்களுடைய இருசக்கர வாகனத்தில் அரியக்குடியை நோக்கி சென்றுள்ளனர். ரயில்வே பீடர் சாலையில் சென்று கொணடிருந்த போது, தங்கள் முன்னால் மூடப்படாத பாதாளச்சாக்கடை குழி இருந்தமையால், எதிரே வந்த பேருந்திற்காக அங்கேயே வண்டியை நிறுத்தினர்.

 

 Negligent municipality - sewer

 

இவர்கள் பின்னால் வந்த மற்றொரு பள்ளி வாகனமோ இவர்கள் நின்று கொண்டிருந்ததை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோத, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ரேவதி. கணவர் சண்முகம் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  "முறைப்படி பாதாளச்சாக்கடை மூடியிருந்தால் இந்நிலை நடந்திருக்காதே பாதாளச்சாக்கடை பணியில் அலட்சியம் காட்டுகின்றது நகராட்சி மாவட்ட ஆட்சியர் தலையிட்டால் இனியொரு உயிர்பலி வராது என கோரிக்கை விடுத்துள்ளனர் காரைக்குடி பொதுமக்கள். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்