Skip to main content

எங்களை கொன்றுவிட்டு மண்ணை எடுத்துங்கங்கோ.... ஆளுங்கட்சியிடம் மன்றாடும் நரிக்குறவ மக்கள்!

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

 

ஆட்சியில் இருக்கின்ற வரை, எது கிடைத்தாலும் லாபம் என கண்மாய்களில் மண்ணை அள்ளி காசுப் பார்க்கும் ஆளுங்கட்சியினரை எதிர்த்து தங்களது வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருகின்றனர் நரிக்குறவ இன மக்கள்.

சனிக்கிழமையன்று காலை பள்ளிக்கு, அலுவலகத்திற்கு செல்லும் பரப்பரப்பில் அனைவரும் இருக்க, நகரின் பிரதான சாலையை மறித்து படுத்தும், உட்கார்ந்தும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர் கழனிவாசல் வேடன் நகரில் ஆண்டாண்டு காலமாக வசித்து வரும் நரிக்குறவ இன மக்கள், வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தங்களது சாமர்த்தியத்தை காட்ட, " நாங்கள் எளியவர்களே எங்களிடம் உங்கள் ஜம்பத்தைக் காட்டவேண்டாம். எங்கள் குடியிருப்புப் பகுதியில் மண்ணை சுரண்டுவதை நிறுத்துங்கள். இல்லையெனில் எங்களைக் கொன்றுவிட்டு மண்ணை அள்ளிக்கொள்ளுங்கள்." என தங்களது உறுதியினைக் காட்டிய அம்மக்களிடம், " இங்கு பாதையை மறிக்க வேண்டாம். அனைவருக்கும் சிரமமாகும். சம்பவ இடத்தில் போராட்டத்தினை துவக்கலாம்." என சமூக ஆர்வலர்கள் எடுத்துக்காட்ட, அடுத்த நிமிடமே மண்ணை அள்ளிக்கொண்டிருக்கும் தங்களது குடியிருப்புப் பகுதியில் உட்கார்ந்து தங்களது போராட்டத்தினை துவக்கினர் நரிக்குறவ இனமக்கள்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலில் 116 ஏக்கர் பரப்பளவு கொண்ட சங்கு சமுத்திரக் கண்மாய் பகுதியில் கண்மாய்க்கரைகளைப் பலப்படுத்தும் நோக்குடன் 0.90 மீட்டர் ஆழத்திற்கு 6,750 கன மீட்டர் கிராவல் மண் அள்ளிக்கொள்ள ஆளுங்கட்சியினை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்காக காரைக்குடி பர்மா காலணியை சேர்ந்த சுப்பராயன் மகன் செல்லப்பாண்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக் கொடுத்தது. ஆனால், அதே சங்கு சமுத்திரகண்மாய் அருகில் உள்ள வேடன் நகரில் 70 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. " கண்மாயைப் பலப்படுத்துக்கின்றோம் எனும் நோக்கில் மிகுந்த ஆழப்படுத்தி வருகின்றனர். மண் அள்ளுவதால் மெகா பள்ளங்கள் ஏற்பட்டும் நாங்கள் பணிக்காக வெளியூர் சென்றுவிடும் நாட்களில் தனியாக இருக்கும் எங்களது குழந்தைகள் இதில் விழுந்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. எங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த செயலை நிறுத்தாவிடில் போராட்டம் தீவிரமடையும்." என்கின்றனர் வேடன்நகர் பகுதி மக்கள். இதனால் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

'சோதனை செய்யும் பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை'- தேவநாதன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Action on Test Flying Officers'- Devanathan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருவரங்குளம், வம்பன், குளவாய்ப்பட்டி உட்பட பல கிராமங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். வேட்பாளரின் பிரச்சார இடங்களுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்ய கேட்டனர்.

அதேபோல திருவரங்குளத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்திற்குள் பறக்கும் படை வாகனம் வந்ததும் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த தேவநாதன், 'இது திமுக தேர்தல் இல்லை நாடாளுமன்றத் தேர்தல். தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போல அதிகாரிகள் கூட்டத்திற்குள் வருகின்றனர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த அதிகாரிகள் மீது புகார் கொடுப்போம். நடவடிக்கை இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தேர்தல் விதிமுறைகளின் படி பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்வது வழக்கமானது தான் ஆனால் தேவநாதன் அதிகாரிகளை மிரட்டுவது போன்று பேசுகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.