Skip to main content

நரி கொண்ட குகை நோக்கி வழிமாறிச்சென்று விழி பிதுங்கி நிற்போரின் எண்ணிக்கை 18 - நமது அம்மா நாளிதழ்!

Published on 14/06/2018 | Edited on 14/06/2018


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக நமது அம்மா நாளிதழில் கவிதை வெளியிடப்பட்டுள்ளது. பதினெண் கீழ் கணக்கு என்ற தலைப்பில் வந்துள்ள அந்த கவிதையில்,

செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற சித்தர்கள் கணக்கு பதினெட்டு...

இலை கொண்ட இயக்கம் விட்டு, நரி கொண்ட குகை நோக்கி வழிமாறிச்சென்று, சேராத இடம் சேர்ந்து செயலிழந்த தம் பதவி...

மீண்டும் உயிர் வந்து வாழுமோ என விழி பிதுங்கி நிற்போரின் எண்ணிக்கை மொத்தமும் பதினெட்டு...

என்ன செய்வது..

மண்ணில் விழும் மழைநீர் போல், மனிதரும் சேரும் இடம் பொறுத்தே தன்னிலையில் உயர்ந்து வாழ்வதும், தடம் மாறிச்சென்று தலை குனிந்து வீழ்வதும்...

கரம் சிவக்கக் கொடுத்துச் சிறந்த கர்ணனும், களத்தே மாண்டான் எனில் துஷ்ட துரியோதனக் கும்பலோடு கூடாத இடம் தன்னில் கூடியதால் தான்...

சகுனியைச் சார்ந்தோர் அழிந்ததும்..

 

 

சாரதியாம் கண்ணனைச் சார்ந்தோர் வாழ்ந்ததும்...

அவனை நம்பிய அவல் குசேலனும், அதிகுபேரன் ஆனதும்.. குலம் பார்த்து கூடியதால் மட்டுமே!

செம்புலப் பெயல் நீர்போல் சேரும் இடம்பொறுத்தே சிறப்புகள் எட்டுகிறது. போய்ச் சேரும் வழி பொறுத்தே பொறுப்புகள் கிட்டுகிறது!

திருமாலை வணங்கியதால் முடிதுறந்த மன்னனும் குலசேகர ஆழ்வாராய் குடி உயர்ந்தது போல, நல்லோரை கும்பிட்ட கரங்களுக்கு மட்டும்தான் அது பிரியுமுன்னே நன்மைகள் குவிகிறது!

வாய்மையின் வழிநின்று வணங்கும் கைகளுக்கு மட்டும்தான் அது விலகுமுன்னே வரங்கள் வாய்க்கிறது!

அதைவிட்டு பதவி தந்த இயக்கத்தை மறந்து பாசத்தாய் கட்டம் கட்டி வெளியேற்றிய பாதகக் கூட்டத்தோடு சேராத இடம் சேர்ந்தால் பிறகென்ன சேதாரம் தானே... இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'நமது அம்மா' நாளிதழில் இருந்து மருது அழகுராஜ் விலகல்! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Maruthu Alaguraj withdraws from 'Namadu Amma' daily!

 

'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

 

அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை பதவிக்காக மாறி மாறி மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும், இரு தரப்பு ஆதரவாளர்களும் செய்தியாளர்களைச் சந்தித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நீக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில், 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை, சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

'நமது அம்மா' நாளிதழ் பொறுப்பில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கம்! 

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

From the responsibility of our mother newspaper O.P.S. Dismissed!

 

அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், 'நமது அம்மா' நாளிதழ் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். 

 

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழின் நேற்றைய பதிப்பில் நிறுவனர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என பெயர் இருந்த நிலையில், இன்று (26/06/2022) வெளியான 'நமது அம்மா' நாளிதழில் நிறுவனர் பொறுப்பில் இருந்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான அந்த நாளிதழில் 'நமது அம்மா' நாளிதழின் நிறுவனர் எடப்பாடி பழனிசாமி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம் பெறவில்லை. 

 

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் அலுவலகங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் படம் அகற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

அ.தி.மு.க.வில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியிருந்த நிலையில், நமது அம்மா நாளிதழ் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருப்பது அவரது தரப்பு ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.