Published on 29/11/2019 | Edited on 29/11/2019

நா.காமராசன், உளுந்தூர்பேட்டை சண்முகம், பாபநாசம் குறள்பித்தன், இரா.இளவரசு, அடிகளாசிரியர், இறைக்குருவனார், ம.கோபாலகிருட்டிணன் ஆகிய 7 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக் கப்பட்டுள்ளன. இதற்காக 7 தமிழறிஞர்களின் மரபு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் வீதம் மொத்தம் 35 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
இதுவரை 149 தமிழர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.