Skip to main content

"என் வீதி உன் கழிப்பறையா? " -சென்னையில் களை கட்டும் மாணவிகளின் விழிப்புணர்வு பிரச்சாரம்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

 

மழைக்காலங்களில் இதற்கு முன்பு வரை எடுக்கப்படாத பல முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது சென்னை மாநகராட்சி. சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவிகளை தூதர்களாக நியமித்து ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறார் சென்னை மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் இந்த பிரச்சாரம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. 
 

chennai corporation



        

சென்னையில் மழைக்காலங்களில் பரவும் நோய்களை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம். குப்பைகள் தேங்காமல் இருக்கவும், கொசுக்களின் உற்பத்தியை தடுக்கவும் மாநகராட்சி ஊழியர்களை முடுக்கி வருகிறார் பிரகாஷ். அதே சமயம், சென்னைவாசிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளை பிரச்சார தூதர்களாக நியமித்து, என் வீதி என்ன உன் வீட்டு கழிப்பறையா?, தொட்டிக்கு அழகு குப்பை, கொசுக்களை நசுக்குவோம் என்கிற வாசகங்களுடன் டிஜிட்டல் மற்றும் ஆட்டோ பிரச்சாரத்தை துவக்கியிருக்கிறார்கள். 
 

chennai corporation



 

மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் நடக்கும் இந்த பிரச்சாரம், 80 சதவீதம் பலனளித்திருப்பதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு ரிப்போர்ட் தந்துள்ளது மாநகராட்சி. அந்த ரிப்போர்ட்டில் உற்சாகமடைந்துள்ள அமைச்சர் வேலுமணி, " 100 சதவீத விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஒத்துழைப்பில்லாமல் கொசு ஒழிப்பை சாதிக்க முடியாது. மழை நீர் சேகரிப்பையும் மழைக்கால நோய்த்தடுப்பையும் இன்னும் விரிவுப்படுத்துங்கள். அதற்காக, ஆட்டோ பிரச்சாரத்துடன் போஸ்டர் பிரச்சாரத்தையும் செய்யுங்கள் " என உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். 
அதன் பேரில், தற்போது மாநகராட்சியின் தூதர்களான மாணவிகளின் பிரச்சாரம் சென்னை முழுக்க போஸ்டர்களாக காட்சியளிக்கின்றன.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.