Skip to main content

"வெற்றி வாகை சூடிய கண்மணிகளுக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்"- டிடிவி தினகரன் ட்வீட்!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

"My heartfelt congratulations to the winners" - DTV Dhinakaran Tweet!

 

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதேபோல், 95%- க்கும் மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதற்கடுத்து அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் குறிப்பிடத்தகுந்த இடங்களில் வெற்றிபெற்றுள்ளார். 

இந்த நிலையில், அ.ம.மு.க. வேட்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி! உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் பணபலமும், அதிகார பலமும்தான் கொடிகட்டிப் பறக்கும் என்பது தெரிந்திருந்தாலும் அம்மாவின் உண்மையான பிள்ளைகளாக நெஞ்சுரத்தோடு களம் கண்ட கட்சி வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காகப் பணியாற்றிய கட்சி உடன்பிறப்புகளுக்கும் வெற்றி வாகை சூடிய கண்மணிகளுக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்தோடு நம் பணியைத் தொடர்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்