Skip to main content

காக்கிச் சட்டைக்குள் ஈரம்! முத்துலட்சுமி முகத்தில் புன்னகை!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

 

 



காவல்துறை குறித்த ‘நெகடிவ்’ தகவல்கள் மட்டுமே அதிகம் பகிரப்பட்டுவரும் நிலையில், வழக்கு ஒன்றில் அத்துறையின் ‘பாசிடிவ் அப்ரோச்’ இது -

தினுசு தினுசான மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் - கல்குறிச்சி சமத்துவபுரத்தில் வசித்துவந்த வேல்முருகனும் ஒரு தினுசானவர்தான். கார் டிரைவர் வேலை பார்த்த வேல்முருகன் கடந்த 2012-ல் முத்துலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். மனைவி கர்ப்பமான நிலையில் மூன்றே மாதத்தில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ மாயமாகிவிட்டார். மகன் பிறந்தும் வீடு திரும்பாத கணவன் வேல்முருகனை பல ஊர்களிலும் தேடி நொந்துபோனார் முத்துலட்சுமி.

நான்கு வருடங்கள் கடந்த நிலையில் முத்துலட்சுமியிடம் குடும்ப நண்பர் ஒருவர்  “நீயா எப்படிம்மா உன் புருஷனை கண்டுபிடிக்க முடியும்? போலீஸ்காரங்க எதுக்கு இருக்காங்க? மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேசன் போயி கம்ப்ளைண்ட் கொடு. அவங்க கண்டுபிடிச்சு கொண்டுவந்திருவாங்க.” என்று நம்பிக்கை அளித்திருக்கிறார். முத்துலட்சுமியும் கடந்த 7-6-2012 அன்று காணாமல் போன கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு 6-6-2016 அன்று புகார் கொடுத்தார். மாதங்கள், வருடங்கள் உருண்டோடின. தீவிரமாக தேடிய காவல்துறையினருக்கு வேல்முருகன் இருக்கும் இடம் தெரியவில்லை. 
 

Moisture in the shirt Muthulakshmi smile on the face!


காவல்துறை மூலம், தனக்கு  ஒரு தீர்வு கிடைக்கும் என்பதை முத்துலட்சுமி அறிந்திடாத நிலையில் “இது என்ன மேன் மிஸ்ஸிங் கேஸ் ரெண்டு வருஷமா பெண்டிங்ல இருக்கு?” என்று மல்லாங்கிணர் போலீசாரிடம் கேட்ட விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராசராசன், அருப்புக்கோட்டை தாலுக்கா இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தேடும்படி உத்தரவிட்டார். வேல்முருகனின் சொந்தக்காரர் ஒருவரிடமிருந்து பெற்ற செல்போன் நம்பரை  ‘ட்ரேஸ்’ செய்த தனிப்படையினரின் விடா முயற்சிக்கு பலன் கிடைத்தது. திருப்பூர் மாவட்டம், குளத்துபாளையத்தில் வேலை பார்த்த வேல்முருகனை அழைத்துவந்து, முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

ஆறு வருடங்கள் கழித்து வேல்முருகன் கிடைத்த சந்தோஷத்தில் முத்துலட்சுமியின் குடும்பத்தினர் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராசராசனை நன்றிப்பெருக்கோடு சந்தித்தனர். அழுகையும் ஆனந்தமும் ஒருசேரப் பொங்கிப் பெருகிட கையெடுத்துக் கும்பிட்டார் முத்துலட்சுமி. விரைப்பான காக்கிச் சட்டைக்குள்ளும் ஈரம் இருப்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது அந்தக் காட்சி!

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.