Skip to main content

“இந்தியாவிலேயே நகைக்கடன் தள்ளுபடி செய்த ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின்” - அமைச்சர் ஐ.பெரியசாமி  

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

"MK Stalin is the only Chief Minister in India who has waived jewelery loans" - Minister I. Periyasamy

 

சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அறிவித்திருந்தது. அதன்படி முறையான பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடாக ஒரே ஆதார் அட்டையை வைத்து நூற்றுக்கணக்கான வங்கிகளிலும், ஒரே நபர் 500 பவுனுக்கு மேல் வங்கிகளில் 5 பவுன், 5 பவுனாக நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தது தெரியவந்தது. இதை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருப்பவர்களை முறையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். 

 

இதனையடுத்து அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் திடுக்கிடும் தகவல்களும், முறைகேடுகளும் தெரியவந்தது. தமிழக முதல்வர் அறிவித்தபடி முறைப்படி நியாயமான பயனாளிகள் நகைக்கடன் தள்ளுபடியை பெற்று வருகின்றனர். அதேசமயம் எதிர்க்கட்சிகள், அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

 

இந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் 48 லட்சம் பேருக்கு கடன் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 22 லட்சம் பேர் தான் முறைப்படி 5 பவுனுக்கு கீழ் கடன் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் 10 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்தில் 50 சதவிகிதம் பேர் பயனடைந்துள்ளனர். 

 

சுதந்திரம் அடைந்ததிதிலிருந்து இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார். இந்த நகைக்கடன் தள்ளுபடியில் வருமான வரி கட்டும் அரசு ஊழியர்களுக்கு எப்படி கடன் தள்ளுபடி செய்ய முடியும். தற்காலிக அரசு பணியில் இருப்பவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை. ஆனால், வருமானவரி கட்டுபவர்களும், நகைக்கடன்களை கட்டி நகைகளை பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி கிடையாது. அவர்களுக்கு முறையாக கேட்கும்போது வட்டியில்லாமல் நகைக்கடன் வழங்கப்படும்.

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டபோது சிறு, குறு விவசாயிகள், பெரு விவசாயிகள் என தரம் பிரிக்கப்பட்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்தார்கள். ஆனால் தி.மு.க. தலைவர் கலைஞர் தமிழகத்தில் 22லட்சம் பேருக்கு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தார். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் போது சிறு, குறு என பிரித்தவர்கள் இப்போது நகைக்கடனை அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கின்றனர். இதில் என்ன நியாயம் இருக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 400 பவுன் நகைகளை 5, 5 பவுனாக பிரித்து பல வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எப்படி நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியும். 5 கோடியே 85 லட்சம் ரூபாயை ஒரே நபர் 5 பவுன் நகைகளாக வைத்து கடன் உதவி பெற்றுள்ளார். தர்மபுரி சேலம் பகுதியில் நகைக்கடன் உரிமையாளர்கள் பான் புரோக்கர்கள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் கடன் தள்ளுபடி செய்ய சொல்லி எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ். சொல்கிறார்கள். இது முறையா?

 

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு செய்தவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மக்கள் நலனுக்கான மக்களாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மாற்றுக்கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் சொல்லி வருகின்றனர். இதை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை” என்று கூறினார்.

 

நிகழ்ச்சியின்போது, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் நகர்மன்றத்தலைவர் பசீர்அகமது, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'விரைவில் விசாரிக்கும் நோக்கத்திற்காகத் தான் சிபிசிஐடி'-ஆர்.எஸ்.பாரதி பேட்டி

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
'CBCID is aiming to investigate quickly' - RS Bharati interview

அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ''2016-ல் 570 கோடி ரூபாய் நடு ரோட்டில் கண்டெய்னர் லாரியில் பணத்தை பிடித்து  இதுவரையில் ஏறத்தாழ 8 வருடம் ஆகிறது. இதனை சிபிஐ தான் விசாரிக்கிறது. நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்ட பொழுது சிபிஐ இன்வெஸ்டிகேஷன் கேட்கவில்லை. நீதிமன்றமே சிபிஐ விசாரணை கொடுத்தது.

டெல்லியில் நேரடியாக போய் சிபிஐ இடத்தில் கேட்டேன் ஆனால் எட்டு வருடம் ஆகிறது 570 கோடி ரூபாய் யாருடைய பணம் என்பதை இதுவரையில் சொல்லவும் இல்லை, அதற்கான எஃப்.ஐ.ஆரையும் சிபிஐ போடவில்லை. இப்படி பல வழக்குகள் தமிழ்நாட்டில் சிபிஐயில் நிலுவையில் இருக்கிறது. ஆகவே சிபிசிஐடி விசாரணை என்றால் துரிதமாக முடிக்க முடியும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் முதல்வர் கள்ளக்குறிச்சி சாராய மரணத்தை விசாரிப்பதற்காக சிபிசிஐடி விசாரணை மட்டுமல்ல, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டியையும்  அமைத்துள்ளார்.

ஆனால் எடப்பாடி 'சிபிஐ... சிபிஐ..'. என்று திருப்பி திருப்பி கேட்கிறார். கேட்டால் சிபிசிஐடி காவல் துறை மீது நம்பிக்கையே இல்லை என்று சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் வழக்கில் நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. நாங்கள் அன்றைக்கும் இன்றைக்கும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி ஸ்டே வாங்கி விட்டார். பிறகு 2022-ல் வழக்கு இறுதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஏற்கனவே விசாரித்தது சரியில்லை என்பதற்காக ஸ்டேட் போலீஸ் ஒரு விசாரணைக் குழு அமைத்து விசாரித்தார்கள்.

காவல்துறையின் சார்பாக விசாரித்து வந்த நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தது. நான் தனிப்பட்ட முறையில் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். அதனுடைய அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்றது. காவல்துறையும் அதனை விசாரிக்கும் காரணத்தினால் ஒரே வழக்கிற்கு இரண்டு பேர் தேவையில்லை என்று நான் அந்த மனுவை திரும்ப பெறுகிறேன் என்று சொன்னேன். இது ஒன்றும் புதிதாக நடைபெறவில்லை. 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது டான்சி வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான் தான் திமுக சார்பில் தொடர்ந்தேன். அதனுடைய வரலாறு உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். அந்த வழக்கை போட்டார் என்பதற்காக சண்முகசுந்தரம் 32 இடங்களில் வெட்டப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். காரணம் என்னவென்று கேட்டால் ஒரு அரசு ஊழியர் செய்ய முடியாத செயலை செய்தால் 169 சட்டப்பிரிவின்படி தண்டிக்கலாம். அந்த வழக்கை நாங்கள் தான் முதல்முறை சைதாப்பேட்டை கோர்ட்டில் போட்டபோது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜெயலலிதாவிற்கு சம்மன்  அனுப்பினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் போய் அதற்கு ஸ்டே கேட்டார். நீதிபதி ஸ்டே கொடுக்க மறுத்துவிட்டார். நீங்கள் கீழ் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த வேண்டும் ஸ்டே கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்தார். அதனால் என்னென்ன கஷ்டங்களை நீதிபதி அனுபவித்தார் என்பதெல்லாம் எல்லோருக்கும் நாட்டிற்கும் தெரியும்'' என்றார்.

Next Story

உள் ஒதுக்கீடு; விவாதிக்க அமைச்சர் தயாரா? - அன்புமணி சவால் 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Anbumani challenges minister sivasankar to discuss reservation

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸடாலின், “இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும்” என்று பதிலளித்தார். 

இதனைத் தொடர்ந்து ஜி.கே.மணியின் கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர், “முன்னாள் முதல்வர் கலைஞர்தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார். ஆனால் அவரை அந்த சமூகத்திற்கு எதிரானவர் போன்று சித்தரிக்கும் வேலையை பாமக தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த இடஒதுக்கீடு போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தபோது காக்கைக் குருவிபோல் சுட்டுக் கொன்றது யார் என்பதை மறந்துவிட்டு அவர்களோடு கூட்டணி அமைத்தீர்கள். 20 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிரியாகக் காட்டினீர்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலே 10.5 சதவிகிதம் கொடுத்த அஇஅதிமுகவையும் கைவிட்டுவிட்டீர்கள். சமூக நீதிக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன் தற்போது கைகோர்த்துள்ளீர்கள் என பதிலடி கொடுத்தார். நீண்ட நேரம் தொடர்ந்து அவரின் உறையில் பாமக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.  

இந்த நிலையில் இன்று செதியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக விவாதத்திற்கும்  அழைப்பு விடுத்துள்ளார்.  அவரது அழைப்பை ஏற்று அவரோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.  தேதி,  இடம்,  நேரம் ஆகியவற்றை அமைச்சர் சிவசங்கரே முடிவு செய்து அழைக்கட்டும். எப்போது அழைத்தாலும் விவாதத்திற்கு வருவதற்கு நான் தயாராக உள்ளேன்.

திண்டிவனத்திலிருந்து ராமதாஸ் குரல் ஒலிப்பதாக  அமைச்சர் சிவசங்கர் சொல்கிறார்.  அந்த குரல் மட்டும்  ஒலிக்க வில்லை என்றால் சிவசங்கர்,  அமைச்சராகவே ஆகியிருக்க முடியாது.  இது தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுப்பதால் மற்ற சமூகங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. இது வன்னியர்கள் சார்ந்த பிரச்சனை அல்ல; தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனை. தற்போது கலைஞர் முதலமைச்சராக இருந்திருந்தால் எங்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு கேட்காமலே கிடைத்திருக்கும்.

தமிழ்நாட்டில் முறையாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் பட்டியலின மக்களுக்கு தற்போது வழங்கும் 18 சதவீதத்துக்கு பதிலாக 22 சதவீதம் கிடைக்கும்.  தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பிற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. பீகாரில் சாதி வாரி  கணக்கெடுப்பை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.  அங்கு இட ஒதுக்கீடு வரம்பு மீறியதை தான் ரத்து செய்து இருக்கிறார்கள். 

இது புரியாமல் சட்டப்பேரவையிலும், வெளியிலும் தமிழக முதலமைச்சர் பொய் சொல்லி வருகிறார். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், அருந்தியர்களுக்கும் எந்த சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்  ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது?  எந்தவிதமான கணக்கெடுப்பும் நடத்தாமல் எம்பிசிக்கு 20 சதவீத ஒதுக்கீடு கொடுக்க முடியுமானால் வன்னியர்களுக்கும் உள் ஒதுக்கீடு கொடுக்க முடியும். சாதிவாரி  கணக்கெடுப்பு தொடர்பாக மீண்டும் தமிழக முதலமைச்சரை சந்திப்பேன். சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.

மேலும், “கள்ளக்குறிச்சியில் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தான் சாராயம் விற்கப்படுகிறது என்பது அங்குள்ள அனைவருக்குமே தெரியும். ஒரு எம்எல்ஏவின் தம்பி தான் இதை முழுவதுமாக கவனித்துக் கொள்கிறார். சாராயம் காய்ச்சிபவர்களும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தும் எங்கள் மீது வழக்கு தொடுக்கிறார்கள்.  இது வேடிக்கையாக உள்ளது. எங்களிடம் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் உள்ளன. இதை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார்.