Skip to main content

தொகுதி மக்களுக்காக நகரும் படிக்கட்டைக் கொண்டு வந்த அமைச்சர் சக்கரபாணி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Minister sakkarapani bought a moving staircase for people of the constituency

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில்  தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்றதின் மூலம் உணவு மற்றும்  உணவுப்பொருள் துறை அமைச்சராக சக்கரபாணியை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து வாக்களித்த மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்காக கடந்த  மூன்று ஆண்டுகளாக தொகுதி வளர்ச்சிக்காக இரண்டு கலைக்கல்லூரி, ஐடிஐ, கலைஞர் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள், விவசாய பொருட்களை வைப்பதற்காக குளிர்சாதன கிடங்கு, மார்க்கெட் மற்றும் ஆயிரம் கேடியில் தொகுதியில் நிரந்தர காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், ஒட்டன்சத்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு அதுபோல் இடையகோட்டை பசுமை மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ஒரு லட்சத்துக்கும் மேல் நட்டு மரமாய் வளர்த்து இயற்கை சூழலை உருவாக்கி இருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது கொத்தயம் அருகே தொகுதி மக்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் தொழிற்பேட்டையை 55 ஏக்கரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயனளிக்கும் வகையில் நூறு சிறு குறு தொழிற்கூடங்களைக் கொண்டு வர இருக்கிறார். இப்படி கோடிக்கணக்கில் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியும், செயல்படுத்திக் கொண்டும்  இருக்கிறார். 

அதுபோல் நகராட்சியாக உள்ள ஒட்டன்சத்திரத்தில் பல அடிப்படை வசதிகளை கொண்டு வந்து நகரில் உள்ள சாலைகளை அகலப்படுத்தி சாலையின் நடுவில் மின்விளக்குகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்தும் இருக்கிறார். அதுபோல் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாலை, குடிநீர், மின்சாரம் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தும் இருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் தொகுதி மக்களும் எங்கள் பகுதிக்கு மதுரை, சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் இருப்பது போல் நகரும் படிக்கட்டுகளை  கொண்டு வர வேண்டும் என அமைச்சர் சக்கரபாணியிடம் நகர மக்களும், வியாபாரிகளும் வலியுறுத்தி இருந்தனர். அதைத் தொடர்ந்து தான் அமைச்சர் சக்கரபாணியும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருந்தார்.

Minister sakkarapani bought a moving staircase for people of the constituency

இந்த நிலையில்தான் சட்டமன்ற கூட்டத் தொடரின்போது நடைபெற்ற நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையின்போது 28 கோடியில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் இரண்டு இடங்களில் அமைக்கப்படும்.  அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் மற்றும் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே  அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் சக்கரபாணி முதல்வரைச் சந்தித்து வாழ்த்து கூறனார். இப்படி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகரும் படிக்கட்டுகளோடு கூடிய மேம்பாலத்தை அமைச்சர் சக்கரபாணி கொண்டு வந்திருக்கிறார். இதற்கு தொகுதி மக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் இருக்கிறார்கள். அதோடு தொகுதி அமைச்சரான சக்கரபாணிக்கும் தொகுதி மக்களும், விவசாயிகளும், வியாபாரிகளும் நேரில் சென்று மாலை சால்வை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தும் செல்போன் மூலமும் நன்றி தெரிவித்தும் வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாநில கல்விக் கொள்கை ரெடி; அறிக்கை சமர்ப்பிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 State Education Policy Ready; Report submission

மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்திருந்த தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு மாநிலத்திற்கான கல்விக் கொள்கை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 2022 ஜூன் 1 ஆம் தேதி   ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழு மாநில அரசுக்கான கல்விக் கொள்கையை வடிவமைக்க கருத்துக்கள் கேட்பதோடு, பரிந்துரைகளை வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது அக்குழு மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையைத் தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டு, அக்கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கை தற்போது தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழில் 600 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட அறிக்கையில் நீட் தேர்வு இருக்கக் கூடாது; இருமொழி கொள்கையே தொடர வேண்டும்; கல்லூரிகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமின்றி, பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும்; 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படக் கூடாது உள்ளிட்ட பரிந்துரைகள் மாநில கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Tamil Nadu Chief Minister's Letter to 8 State Chief Ministers

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் போலீசார் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இன்று  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'மாணவர்களுடைய நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். நீட் விலக்கு கோரிய தீர்மானம் தொடர்பான சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு கோப்பு நிலுவையில் உள்ளது வருத்தம் அளிக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தொடர்ச்சியான கோரிக்கை மீண்டும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளதோடு, இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் முதல்வர் கடிதத்தில் இணைத்துள்ளார்.

அதேபோல் தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என எட்டு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.