Skip to main content

“முதல்வரின் போராட்டத்தால்தான் 7.5% இட ஒதுக்கீடு கிடைத்தது” - அமைச்சர் மெய்யநாதன் 

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

Minister Meyyanathan said that 7.5% reservation was got only because cm stalin's struggle.

 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் தேர்ச்சி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று வருவதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி, கிராமத்தினர் கலந்து கொண்ட விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “கல்வியால் மட்டுமே நம்மால் உயர முடியும் என்று பல்வேறு தடைகளைக் கடந்து தொடர்ந்து சாதித்து வரும் மாணவ, மாணவிகளைப் பாராட்டுகிறேன். இப்போது ஒரு மாணவியிடம் என்ன படிக்கப் போறிங்க என்று கேட்டேன். செவிலியருக்கு படிக்கணும் என்றார். மதிப்பெண் போதுமா? கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று கேட்டேன். அதற்கு அந்த மாணவி சொன்ன பதில்... நான் தொடர்ந்து அரசுப் பள்ளியில் படித்ததால் 7.5% இட ஒதுக்கீட்டில் எனக்கு இடம் கிடைக்கும் என்று சொன்னார்.

 

இந்த 7.5% இட ஒதுக்கீடு எப்படி வந்தது? கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவம் படிக்க மட்டும் ஒரு குழு அமைத்து இட ஒதுக்கீட்டு மசோதா கொண்டு வந்தபோது அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் அந்த தீர்மானத்தை வரவேற்று ஆதரித்தார்கள். ஆனால் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. அப்போதைய ஆட்சியாளர்கள் அமைதியாக இருந்தபோது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர், இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் என்று போராட்டம் அறிவித்ததால் தான் இந்த 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைத்தது. 

 

அதே நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்த மாணவர்களுக்கு அரசு கல்விக் கட்டணம் செலுத்துவதாக சொன்னது ஆனால் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களால் ரூ.8, 10, 15 லட்சம் வரை கட்ட முடியாமல் தவித்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் தனியார் கல்லூரி மாணவர்களுக்கான கட்டணங்களை திமுக கட்டுவதாக அறிவித்த பிறகு அன்றைய அரசு ஏற்றது.

 

கடந்த ஆட்சியில் 7.5% இட ஒதுக்கீடு மருத்துவம் மட்டும் கொடுத்தார்கள் ஆனால் அனைத்து கல்விக்கும் இட ஒதுக்கீடு தந்தவர் முதல்வர் ஸ்டாலின். ஏழை மாணவனுக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்தது தான் சமூகநீதி. கர்மவீரர் காமராஜர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் தற்போது மு.க. ஸ்டாலின் ஏழைகளின் கல்விக்காக உழைத்தவர்கள். அதனால் தான் தமிழ்நாடு 89% கல்வியிலும் 52% உயர்கல்வியிலும் உயர்ந்து நிற்கிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.