Skip to main content

திமுக-த.மா.கா இடையே நாற்காலிச் சண்டை..! இது திருப்புவனம் கூத்து..!!

Published on 23/01/2019 | Edited on 23/01/2019
t

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் தேர்தல் கடந்த ஆண்டு ஏப்.24-ந்தேதி நடைபெற்றது. திமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் 11 பேரும், த.மா.கா சார்பில் முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியன் தலைமையில் 11 பேரும் போட்டியிட்டனர்.

ஆனால், உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கை நடத்தாமலே, வாக்கு பெட்டிகள் சங்க அலுவலத்திற்குள் வைத்து பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. பூட்டிய அந்த அறைக்குள் தான் அலுவலக கோப்புகள், மாட்டுத் தீவனம் போன்றவை இருப்பது தெரியாமல் 'சீல்' வைத்துவிட்டனர். 

 

t

 

இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதோடு, கறவை மாடுகளுக்கும் தீவனம் வழங்கமுடியாத நிலை நீடித்தது. இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டதால் இரு தரப்பினரின் முன்னிலையில் 'சீல்' அகற்றி, ஆவணங்களை எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதன்படி நேற்று இதற்கான பணிகள் நடந்தன. அங்கு வந்திருந்த நிர்வாகிகள் அமர பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. திமுகவினர் தங்களுக்கு தரமான நாற்காலி வேண்டும் என்றன. உடனே அங்கிருந்த பிளாஸ்டிக் சேர்கள் மாற்றப்பட்டு, வயரால் பின்னப்பட்ட நாற்காலி போடப்பட்டது. உடனே த.மா.காவினரும் எங்களுக்கும் வயரால் பின்னப்பட்ட சேர் வேண்டும் என அடம்பிடித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பில் முடிந்தது. 

 

t

காங்கிரசுக்கே உரிய பாணியில் த.மா.கா நிர்வாகிகள் நாற்காலிகளை தூக்கி வீசினர். இதற்கு திமுகவும் சளைக்காமல் ஈடு கொடுத்து நாற்காலிகளை வீசி பதிலடி கொடுத்தனர். இந்த கொடுமைகளை பார்த்த போலீஸார், தலையில் அடித்துக் கொண்டு, அவர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்தனர். வேடிக்கை பார்த்த மக்களும் இந்த சண்டையை பார்த்து கேலியாக சிரித்து சென்றனர்.

ஸ்ஸ்ஸ்......கொடுமைடா சாமி..!

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார்!

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

D. Rajender who went to America is fully recovered!

 

உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் பூரண குணமடைந்துள்ளார். 

 

திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிற்றில் லேசான ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட டி.ராஜேந்தர் தற்போது பூரண குணமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். ஒரு மாதம் அமெரிக்காவிலேயே தங்கி ஓய்வெடுக்க தேவையான வசதிகளை செய்து கொடுத்துவிட்டு, நடிகர் சிலம்பரசன் சென்னை திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.