Skip to main content

33 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.. புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டும் மு.க. ஸ்டாலின்!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

stalin

 

தமிழ்நாட்டில் 17,297 கோடி ரூபாய் மதிப்பிலான 33 திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (20.07.2021) ஒப்பந்தங்கள் கையொப்பமிட இருக்கின்றன. சென்னை கிண்டி ஐடிசி ஹோட்டலில் நடக்கும் விழாவில் புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.

 

இந்த 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டில் 56,041 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம், காற்றாலை, ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட இருக்கிறது. அதானி, ஜேஎஸ்டபிள்யூ, கேப்பிட்டல் லாண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட உள்ளன. ஒப்பந்தங்கள் மட்டுமின்றி 14 பதிய திட்டங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்