Published on 14/12/2019 | Edited on 14/12/2019

தமிழகத்தில் இருக்கும் வெளிமாலித்தவரை வெளியேற்றக்கோரி வரும் 20ம் தேதி போராட்டம் நடைபெறவிருக்கிறது.
இது குறித்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், ‘’தமிழர்களை புறக்கணிக்கக்கூடிய நிறுவனங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பிறமாநிலத்தவர்களுடன் ஒத்துழையாமை இயக்கத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்காக, தமிழகத்தில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்கள் என கணக்கெடுப்பு நடத்தி, 1956ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்திற்கு வந்தவர்களை வெளியார் என்று அறிவிக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த போராட்டம் நடைபெறவிருக்கிறது’’என்று கூறினார்.