Skip to main content

மகளிர் உரிமைத் தொகை; இன்றே வரவு வைக்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

magalir urimai amount has been credited in the bank today

 

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்த தமிழ்நாடு அரசு, கடந்த மாதம் வீடுதோறும் விண்ணப்பங்கள் பெற்று பின்னர் அதனைக் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சரி பார்த்துள்ளனர். பலருக்கு வங்கிக் கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு இல்லாததால் அருகில் உள்ள தபால் நிலையம், கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட பணிகள் அனைத்தும் கடந்த வாரம் முடிவடைந்தது.

 

இந்த திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதியான நாளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், குடும்பத் தலைவிகள் கொடுத்துள்ள வங்கிக் கணக்குகள் சரிதானா என்பதைச் சோதனை செய்ய கடந்த சில நாட்களாக 10 பைசா மற்றும் ஒரு ரூபாய் என ஏராளமானவர்களுக்கு அனுப்பி சோதனை செய்தனர். 

 

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி எனப் பல சுற்று வட்டார கிராமங்களிலும் உள்ள குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இன்று மதியத்திலிருந்தே ரூ. 1000  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வரவாகி உள்ளது. நாளை முதலமைச்சர் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் முன்பே பணம் கிடைத்துள்ளதாக ஏராளமான குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும் 50 சதவீதம் குடும்பத் தலைவிகளுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்ட 10 பைசா மற்றும் ஒரு ரூபாய் அனுப்பியதற்காக எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை என்பதால் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மேலும் குறுஞ்செய்தி வராதவர்கள் என்ன செய்ய வேண்டும் யாரை அணுக வேண்டும் என்றும் தெரியவில்லை என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.