Skip to main content

'பொய் பேசுவது பிரேமலதாவிற்குக் கைவந்த கலை' - மாணிக்கம் தாகூர் கண்டனம்

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
'Lying is an art acquired by Premalata' - Manikam Tagore condemned

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் கூட்டணியில் இருந்த தேமுதிகவும் வெற்றி பெறாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் கடைசி வரை டஃப் கொடுத்து சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இறுதியில் தோல்வியைத் தழுவினார்.

இன்று சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,''விஜய பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் கடைசியில் ஓட்டு எண்ணிக்கையை நிப்பாட்டி அங்கு பிரஷராக இருக்கிறது எனச் செல்போனை ஆஃப் செய்து 10 முறை வெளியே சென்று கலெக்டரிடம் பேசியது என அங்கு நடந்தது எல்லாமே உள்ளங்கையில் நெல்லிக்கனியாக எல்லாருக்கும் தெரிந்தது.

விருதுநகரில் மதியம் மூன்று மணியிலிருந்து 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது ஏன்? 13-வது சுற்று எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. நள்ளிரவில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. நீதிமன்றத்திற்குச் சென்றால் உண்மையாக உடனடியாக அதற்கு தீர்வு வருமா என்பதை உங்களிடமே கேட்கிறேன். விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார். தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக விருதுநகர் தேர்தல் அலுவலர் கூறினார். 45 நாட்கள் வரைக்கும் மறுவாக்கு எண்ணிக்கை கேட்க உரிமை இருக்கிறது. அதனால் நாங்கள் கேட்கிறோம். இதில் தேர்தல்  ஆணையம் நீதி தர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

'Lying is an art acquired by Premalata' - Manikam Tagore condemned

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இதுகுறித்து குறிப்பிடுகையில், ''விஜயபிரபாகரன் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது அங்குதான் இருந்தார். அப்படி இருக்கும் பொழுது இப்படி பேச்சுக்களை பேசி தேவையில்லாமல் ஒரு தவறான செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல நினைக்கும் பிரேமலதாவின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. வாக்கு எண்ணிக்கையின் போது எல்லோரும் இருந்தார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்தார். 

இப்படி இருக்கும் நிலையில் மக்கள் அளித்த தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மக்களை குழப்புவதும் பொய் பேசுவதும் பிரேமலதாவிற்கு கைவந்த கலை. விஜயகாந்தின் அரசியலையும் முடித்து வைத்தவர் இவர்தான். இப்படிப்பட்ட தவறான பொய்யை பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. என்னைப் பொறுத்த மட்டில் தேர்தல் அதிகாரிகள் மிகக் கடுமையாக உழைத்து நேர்மையான வாக்கு எண்ணிக்கையை நள்ளிரவு ஒரு மணிவரை நடத்தி முடித்தார்கள். அப்படிப்பட்டவர்களை சென்னையில் அமர்ந்து கொண்டு இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பார்கள்'' என தெரிவித்துள்ளார்.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்ற நிலையில் தோல்வியைத் தழுவினார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 4,379 என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக அரசைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 25/06/2024 | Edited on 25/06/2024

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களால் ஏற்பட்ட அவலத்திற்கு தமிழக அரசு தான் காரணம் என்று கூறி அரசைக் கண்டித்து, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக  இன்று கள்ளக்குறிச்சியில் பிரேமலதா விஜயகாந்த் காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்.

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; திமுக அரசைக் கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
DMK struggle against DMK government

தமிழகத்தைக் கஞ்சா , கள்ளச்சாராயம், டாஸ்மாக் மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்கள் தள்ளாடும் நிலைமைக்கு திமுக அரசு கொண்டுசென்றதாகக் கூறி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், “எதற்கெடுத்தாலும் முன்னே வந்து நிற்கும் திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இதுவரை ஏன் வந்து சந்திக்கவில்லை? தனது மகனை அனுப்பி 10 லட்ச ரூபாய் நிவாரணத்தை வழங்கியது ஏன்?

ஒட்டுமொத்த தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது தங்களின் இல்லத்தின் வாசல் முன்பே கருப்பு சட்டை அணிந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆட்சிக்கு வந்து அதை ஏன் செய்யவில்லை, அதேபோல் ஸ்டாலின் தங்கை கனிமொழி தமிழக முழுவதும் டாஸ்மாக்கினால் விதவைகள் அதிகமாக உள்ளதாகக் கூறிய பொழுது தற்பொழுது திமுக ஆட்சி வந்த பின்பு ஏன் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை? எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கு பாதுகாப்பான அரசு எனச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் எத்தனை பெண்கள் தற்பொழுது தங்களது கணவரை இழந்து வாடி வருகின்றனர். இதற்கு என்ன பதில் கூறுவார். நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார் இதுவரை தமிழகத்தில் எத்தனை சாலை சரியாக உள்ளது? கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிரிழப்புக்கு என்ன காரணம் என டெல்லி அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் இந்த விவகாரத்தை சிபிஐ வழக்காக மாற்ற வேண்டுமெனவும் மக்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டும்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அமைத்த பேருந்து நிறுத்தத்தை ஏன் அகற்றினீர்கள்?  இதுதான் உங்களது பணியா? பணத்தை வைத்து மக்களின் வாயை மூடி விடலாம் என நினைக்கும் இந்த அரசை நம்ப கூடாது அதேபோல் இந்த சம்பவத்திற்கு காரணம் இரண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான். திமுக அமைச்சர் முத்துசாமி இத்தனை உயிர் இழப்புக்கு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

இது இந்த பட்டியலின மக்கள் வேறு எங்காவது உயிரிழந்தால் வாய் திறக்கும் நிலையில், தற்போது இங்கு நடந்த உயிரிழப்புக்கு ஏன் திரைத்துறையினர் வாய் திறக்கவில்லை? இந்தக் கள்ளச்சாராயத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பணம் வழங்கிய இந்த அரசு உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கும் மீனவர் குடும்பத்திற்கும் பணம் வழங்குகிறதா? என கேட்டுகொண்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரூ.10 லட்சம் கொடுத்தது இதற்கு தீர்வு கிடையாது. இது பெண்களைப் பாதுகாக்கும் அரசு கிடையாது. ஆயிரக்கணக்கான பெண்கள் தாலி இழந்து வாழ்க்கை இழந்து உள்ளனர். உண்மைக்கு புறம்பானவை மட்டுமே சட்டசபையில் முதலமைச்சர் பேசியுள்ளார். சிபிசிஐடி விசாரணை வைத்து அனைத்தும் மூடி மறைக்க பார்க்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம்  கள்ளக்குறிச்சியில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் திமுகவை சேர்ந்தவர்கள் மட்டும்தான். வழக்கை சிபி.ஐ க்கு மாற்றக் கோரி தேமுதிக தொடர்ந்து போராடும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்” என்றார்.