Skip to main content

காத்திருந்த இந்து அமைப்பினர்; போலீசாரால் தடுக்கப்பட்ட காதலர்கள்! 

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

lovers day against incident in theni district vaigai dam 

 

நேற்று (14.02.2023) உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ஜோடியாக வந்திருந்தனர். காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கும் விதமாக, இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் குமார் தலைமையில், கையில் மாலைகள் மற்றும் மாங்கல்யத்துடன் அங்கு வந்த சிலர், காதல் ஜோடிகளைத் தேடினர். ஆனால் அங்கிருந்த காதல் ஜோடிகள் இவர்களிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

 

பாதுகாப்புக்காக அங்கிருந்த போலீசார் இந்த சம்பவத்தைக் கண்டவுடன் காதல் ஜோடிகளை வைகை அணைக்கு விடாமல் திருப்பி அனுப்பினர். இதனால் காதலர் தினத்தைக் கொண்டாட வந்த காதலர்கள் பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்