சேலத்தில் விளையாட்டு பூங்காக்களை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சக கட்சியினருடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடினார்.
சேலம் மாநகராட்சி பகுதியில் 12 இடங்களில் ரூ.5 கோடியில் பசுமைவெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சிறுவர்கள், முதியோர், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலும், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் வகையிலும் நவீன பூங்காக்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து, பசுமைவெளி பூங்காக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 31, 2018) திறந்து வைத்தார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெறுவதற்கேற்ற பேட்டரி வாகனங்களையும் துவக்கி வைத்தார்.
அம்மாபேட்டை அய்யாசாமி பசுமைவெளி பூங்காவில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து மைதானத்தைப் பார்வையிட்டார். அப்போது கட்சியினர், இறகுப்பந்து விளையாடி, மைதான பயன்பாட்டை துவக்கி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராக்கெட் மட்டையால் இறகுப்பந்தை லவ்-ஆல் சர்வீஸ் செய்தார்.
அவருடன் சேலம் எம்.பி. பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டு இறகுப்பந்தை தட்டி விட்டார். எதிர் முனையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் இளங்கோவன் பந்தை சர்வீஸ் செய்தார். முதல்வர் ஆர்வமாக இறகுப்பந்து விளையாடியதைப் பார்த்த விழாவுக்கு வந்திருந்த அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் கைத்தட்டி ரசித்தனர்.
இதையடுத்து நேரு கலையரங்கத்தில் நடந்த சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பள்ளிகள்தோறும் சாலை பாதுகாப்புக்குழு பணியில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளையும், பாதுகாப்பு கவசங்களையும் வழங்கினார்.
'லவ்-ஆல்' சர்வீஸ் போட்ட எடப்பாடி! சேலம் விழாவில் 'கலகல'!!
சார்ந்த செய்திகள்
Next Story
அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.