உள்ளாட்சி தேர்தல் அரசுக்கு முத்தரசன் கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில்,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் முத்தரசன் அளித்த பேட்டியில் தமிழக அரசு மீது மக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையை இழந்து விட்டனர். உள்ளாட்சி தேர்தல் நடத்துமாறு நீதிமன்றம் கூறியும் தேர்தல் நடத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. கிராமங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதுமான மருந்துகள் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து உள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு கூறினார்.