Skip to main content

உள்ளாட்சி தேர்தலில் அம்மாவுக்கு வாக்கு சேகரித்த அரசு அதிகாரி சஸ்பென்ட்...!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், விதிகளை மீறி ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், இதனை உயர் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும் திமுக மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ குற்றம்சாட்டியிருந்தார். 

 

Local body election-Government officer-Suspends

 



இதுப்பற்றி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து முறையிட்டார். திமுக பிரச்சார கூட்டங்களில், அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம், அப்போது அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என வெளிப்படையாக கூறுகிறேன். அதனால் அதிகாரிகள் உங்கள் பணியை நேர்மையாக செய்யுங்கள் என எச்சரிக்கை கலந்த வேண்டுக்கோள் விடுத்துவருகிறார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், போளுர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாவரம் ஊராட்சியின் செயலராக பணியாற்றியவர் ஆனந்தன். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஊராட்சியில் மக்கள் பிரதிநிதியாக தலைவர் இல்லாததால் அரசு உழியர்கள் நிர்வாகம் செய்து வந்தனர். அதனை பயன்படுத்திக்கொண்டு பணிகள் செய்ததாக போலியாக பில் தயார் செய்து லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் செய்துள்ளார். இது கண்டுபிடிக்கப்பட்டு சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

ஆளும்கட்சியான அதிமுக பிரமுகர்கள் சிலரின் உதவியுடன் மீண்டும் சஸ்பென்ட் உத்தரவை நீக்கவைத்து, திண்டிவனம் என்கிற ஊராட்சியில் பணி மாற்றம் செய்துள்ளனர் அதிகாரிகள். அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், தனது ஊரான கிருஷ்ணாவரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தனது தாய் மாரியம்மாள், 12வது வார்டுக்கு உறுப்பினராக போட்டியிடவைத்துள்ளார். போட்டியிட வைத்ததோடு, தானே தனது தாய்க்கு ஆதரவாக கிருஷ்ணாவரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த திமுகவினர். போளுர் தொகுதி எம்.எல்.ஏ சேகரனிடம் வழங்கினர்.

இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் இரண்டு நாட்களாக பரவியும், எந்த அரசு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுப்பற்றி திமுகவினர் போளுர் ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுக்கொள்ளவில்லை. தேர்தல் பார்வையாளர்க்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் டிசம்பர் 24ந்தேதி காலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரில் வலியுறுத்தினார் எம்.எல்.ஏ சேகரன். அதன்பின், ஆனந்தனை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. 

அரசு ஊழியர் என்பவர் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக பணியாற்ற கூடாது என்கிற விதிமுறை உள்ளது. அதனை அப்பட்டமாக மீறிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துள்ளனர். திமுக எம்.எல்.ஏ நேரில் கலெக்டரை சந்தித்து அழுத்தமாக புகார் கூறியபின்பே நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் எந்தளவுக்கு மாவட்ட நிர்வாகம் ஆளும்கட்சிக்கு சாதகமாக உள்ளது என தெரிந்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள் எதிர்கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும்.

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Action against special police assistant inspectors who joined BJP!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.  

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ அண்ணாமலை பங்கேற்ற நடைப்பயணம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் காவல் சீருடையில் இருந்துகொண்டே பா.ஜ.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. 

இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி தஞ்சை சரக டிஐஜிக்கு அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தஞ்சை சரக டிஐஜி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 

Next Story

2 ஆசிரியர்கள் மாயமான வழக்கில் அலட்சியம்; எஸ்.எஸ்.ஐ 2 பேர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
2 Authors are mysterious case; Action against 2 SSIs

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவருக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவி உள்ளார். வெங்கடேசன், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிபுரிந்து வந்த அதே பள்ளியில், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தீபா (42) என்ற கணித ஆசிரியரும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 15ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற வெங்கடேசனும், தீபாவும், மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதில் பதற்றமடைந்த வெங்கடேசனின் மனைவி காயத்ரி, இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே போல், தீபாவின் கணவரான பாலமுருகன் வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கோவை நகரில் நின்ற தீபாவின் காரை காவல்துறையினர் கண்டுபிடித்து சோதனை நடத்தினர். 

அந்த சோதனையில், தீபாவின் தாலி, 2 குண்டு, தீபா மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், ரத்தக்கறை படிந்த சுத்தியல், அரிவாள் போன்ற ஆயுதங்களை கைப்பற்றினர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். ஆனால், ஆசிரியர்கள் 2 பேரை பற்றி எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. 

இதனிடையே, குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசனின் உறவினர்கள் சிலர் தேனிக்கு சென்று வெங்கடேசனை கண்டுபிடித்து அவரது சொந்த ஊரான குரும்பலூருக்கு அழைத்து வந்து பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியனுக்கு ரகசியமாக தகவல் கொடுத்து குரும்பலூருக்கு வருமாறு கூறினர். ஆனால், எஸ்.எஸ்.ஐ பாண்டியன் அவர்களிடம் மறுநாள் ஸ்டேசனுக்கு வெங்கடேசனை அழைத்து வரும்படி அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த வெங்கடேசன் குரும்பலூரில் இருந்து தப்பி சென்றுள்ளார். அதே போல், தீபாவின் கணவர் வி.களத்தூர் போலீஸ் ஸ்டேசனில் கடந்த மாதம் 18ஆம் தேதி புகார் கொடுத்தும், வி.களத்தூர் எஸ்.எஸ்.ஐ முஹமது ஜியாவுதீன் வழக்குப்பதிவு மட்டும் செய்துவிட்டு தேடும் பணியை துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருந்துள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி கவனத்துக்கு தனிப்படை போலீசார் கொண்டு சென்றனர். இதையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்ததாக பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியன், வி.களத்தூர் எஸ்.எஸ்.ஐ முஹமது ஜியாவுதீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.ஷ்யாம்ளாதேவி அதிரடியாக நேற்று (21-12-23) உத்தரவிட்டார்.