Skip to main content

காதலிகளைக் கொலைசெய்து வீடியோ எடுத்த சைக்கோ! -மனைவி தந்த மெமரி கார்டு!

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ளது பெரும்பகை.  இந்த கிராமத்தை சேர்ந்த விதவைப் பெண்ணான 43 வயது  குட்டியம்மாவுக்கும் அவருக்கு மருமகன் முறை கொண்ட தேவேந்திரனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது ஊருக்குள் அரசல் புரசலாகத் தெரியும். கடந்த 18-ஆம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற குட்டியம்மா மாலையில் வீடு திரும்பவில்லை. 

 

 killed the lovers and took the video;memory card Source

 

தேவேந்திரனின் வீட்டிற்குச் சென்ற குட்டியம்மாவின் மகன் கார்த்தி ( வயது 28) தன்னுடைய அம்மா மாயமானது குறித்து, தேவேந்திரனின் மனைவியிடம் கேட்டிருக்கிறார். தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய தேவேந்திரனின் மனைவி,  “வேண்டுமானால் கூழாங்கல் மலைப் பகுதியில் போய் தேடிப்பார்“ என்று ' பொடி' வைத்துப் பேசியிருக்கிறார். உடனே,  கூழாங்கல் மலைப் பகுதியில் தேடிப்பார்த்தபோது குட்டியம்மாளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேவேந்திரன் மீது செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கார்த்தி. 

 

 killed the lovers and took the video;memory card Source

 

போலீஸார் நடத்திய விசாரணையின்போது  "குட்டியம்மாவுடனான தொடர்பால் என் மனைவி பிரிந்து சென்றாள்.  அதனால்தான், குட்டியம்மாவை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்,  சுமதியுடனான தொடர்பால்,  இதேபோல் என் மனைவி கோபித்துக் கொண்டாள். அவளுடனான தொடர்பையும் துண்டித்தேன். ஆனால்,  என் மனைவி நம்பவில்லை. அதனால் அவளையும் மலைப் பகுதிக்குக் கூட்டிச் சென்று இதே மாதிரி கொலை செய்தேன். அதை வீடியோவாகவும் எடுத்தேன். அந்த வீடியோ உள்ள மெமரி கார்டு என் மனைவியிடம் உள்ளது.”  என்று கூறி அதிர வைத்திருக்கிறான் தேவேந்திரன்.  

 

 

‘தேவேந்திரன் ஒரு மாதிரியான ஆள்தான்.. விழுப்புரம் மாவட்டம் – செஞ்சியைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் திருவிழா நடக்கும்போதெல்லாம் போய்விடுவான். பெண்களுக்குக் குறிவைப்பான்.’  எனச் சொல்லும் அந்த கிராமத்தினர்,  ‘இன்னும் எத்தனை பேரைக் கொலை செய்தானோ?’ என்கிறார்கள் திகிலுடன். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 Sexual harassment of a child girl in uttar pradesh

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்துக் கொள்வதற்காக ஓடிய சிறுமியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்து தொழில்முறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அந்த சிறுமி தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். 

 

அப்போது விஜய் மெளரியா என்ற நபர், அந்தச் சிறுமியைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமியை இடைமறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது அங்கிருந்து தப்பி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஓடிச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியைப் பின் தொடர்ந்த விஜய் மெளரியா, ரயிலில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழியாக வந்த ரயில், சிறுமி மீது மோதியுள்ளது. இதில், அந்த சிறுமியின் ஒரு கையும், இரு கால்களும் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார். 

 

உடனே அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விஜய் மெளரியா மீது போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.