Skip to main content

குடும்பத்துடன் காரில் சுற்றுலா சென்ற அப்பாவி இன்ஜினியர்: டிரைவராக வந்த மனைவியின் காதலன்

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
Wife, driver escape




கர்நாடகா மாநிலம், பாலக்காபாடி, காஞ்சிபட்டா ஜெஎம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சமீர். 32 வயதாகும் சமீர் அரவு நாட்டில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். சமீருக்கும் மங்களூருவைச் சேர்ந்த மைனா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. 
 

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லலாம் என்று மனைவி கூறியதால், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி மனைவி, குழந்தையுடன் வாடகை காரில் புறப்பட்டார். கார் டிரைவர் முகமதுயாசி பெங்களூரூவில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கி விட்டு அடுத்த நாள் காரில் சேலம் வந்துள்ளனர். அங்கிருந்து பின்னர் கொடைக்காணல் சென்றுள்ளனர்.
 

இதையடுத்து 17ஆம் தேதி மைனா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது பெற்றோர், மருமகன் சமீர் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு, சமீர் வேறொரு பெண்ணோடு சேலத்தில் இருந்து எங்கேயோ போய்விட்டார் என்று கூறியுள்ளார். பின்னர் மைனா பெற்றோர் வீட்டில் இருந்துபுறப்பட்டுவிட்டார். 
 

அப்போது மைனா பெற்றோர், தங்களது வீட்டில் இருந்த 60 பவுன் நகையை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மைனா பெற்றோர், தனது மகள் மைனா மற்றும் மருமகன் சமீர் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகளையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.
 

இதேபோல் கார் டிரைவர் முகமது யாசினை காணவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார், மைனா மற்றும் முகமது யாசிம் செல்போன் உரையாடலை வைத்து சோதனை செய்தனர். 
 

இதனிடையே கடந்த 18ஆம் தேதி கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள காட்ரோடு டம்டம் பாறை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். தேவதானப்பட்டி போலீசார், பிரேதப்பரிசோதனைககுப்பின் சுடுகாட்டில் புதைத்தனர். 
 

மைனா மற்றும் முகமது யாசிம் செல்போன் உரையாடலை சோதனை செய்த மங்களூரூ போலீசார் சமீர் உறவினர்கள் சிலருடன் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். டம்டம் பாறை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலத்தை பார்க்க வேண்டும் என்றனர். அப்போது அந்த சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டபோது, கொலை செய்யப்பட்டது சமீர் என்று தெரிய வந்தது. 
 

போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, மைனா - முகமது யாசி இடையே கள்ளக்காதல் இருப்பது தெரிய வந்தது. கணவனை கொலை செய்வதற்காகவே கொடைக்காணல் செல்லலாம் என்று மனைவி கூறியிருக்கிறார். இதற்காக தனக்கு தெரிந்த கார் டிரைவர் உள்ளார் என்று கூறி முகமது யாசினை வரவழைத்துள்ளார். 
 

சேலத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் போது, டம்டம் பாறை அருகே பட்டறைப்பாறை என்ற இடத்தில் முகமது சமீர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை மனைவி மைனா, கள்ளக்காதலன் டாக்சி டிரைவரான முகமது யாசி ஆகியோர் கழுத்தை அறுத்துக் கொன்று, அவரது உடலை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.


செப். 17ம் தேதி  குழந்தையுடன் வீட்டுக்குச் சென்ற மைனா வீட்டில் இருந்து 60 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது. செல்போன் உரையாடலை வைத்து  சோதனை செய்த போது அவர்கள் தமிழகத்தில் உள்ள தர்மபுரியில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவலர்கள் தாக்குதலால் டிரைவர் மரணம்? மக்களின் போராட்டத்தால் தென்காசியில் பதற்றம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi
வேன் டிரைவர் முருகன்

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர்.  ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.