Skip to main content

“கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி!” -கே.பி.முனுசாமியின் சர்ச்சை பேச்சு

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கின்ற 18 சட்டமன்ற தொகுதிகளில் ஓசூரும் ஒன்று. இங்கு இடைத்தேர்தல் ஏன் வந்தது?  20 ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டத்தில், பேருந்துகள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில், அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம். அதனால், அவருடைய மந்திரி பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் பறிக்கப்பட்டு, ஓசூர் தொகுதி காலி இடம் என்று அறிவிக்கப்பட்டதால்,  இடைத்தேர்தல் வந்திருக்கிறது. 

 

BB

 

இன்று (21-3-2019) ஓசூரில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியின் மனைவி ஜோதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மைக் பிடித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி -

 

“சமூக விரோத சக்திகளை அடக்க வேண்டுமென்று போராட்டம் நடத்திய பாலகிருஷ்ணரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1998-ஆம் ஆண்டு நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இது நடந்தது. அந்த வழக்கில் 73-வது குற்றவாளியாக (49-வது குற்றவாளி என்பதே சரியானது) பாலகிருஷ்ணரெட்டி சேர்க்கப்பட்டார். கண்ணை மூடிக்கொண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிவிட்டார் நீதிபதி. கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு வழங்கினாலும் ஓசூர் தொகுதி மக்கள், வேட்பாளர் ஜோதியை வெற்றிபெறச் செய்வார்கள்.” என்றார்.  அவரது பேச்சைக் கேட்டு,  அதிமுகவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

 

cnramki (781)

 

1998-ல் உண்மையிலேயே நடந்தது என்னவென்றால், ஓசூர் ஜூமங்கலம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் கும்பலுக்கு போலீசார் துணைபோவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, கோவிந்தரெட்டி என்பவரோடு கிராம மக்கள் திரண்டுவந்து,   பாகலூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர். அப்போது, காவல்துறை வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினர். அரசுப் பேருந்துகளும் கல்வீசித் தாக்கப்பட்டன. கலவரத்தைத் தடுத்த போலீசார் மீதும் கல் வீசினார்கள். அதனால், 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த வழக்கில், அப்போது பா.ஜ.க.வில் இருந்த பாலகிருஷ்ணரெட்டியை   49-வது குற்றவாளியாகச் சேர்த்தனர்.  2001-ல் அவரை அதிமுகவுக்கு அழைத்துவந்து,   ஓசூர் நகர்மன்ற தலைவராக்கினார் கே.பி.முனுசாமி. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா  பெங்களூரு சிறைக்கு செல்லும்போது, வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்து கடந்த தேர்தலில்  ஜெயலலிதா ஆசியோடு சீட் கிடைத்து மந்திரியும் ஆனார். 

 

 

மக்கள் பிரதிநிதிகளின் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்தான்,  பாலகிருஷ்ணரெட்டிக்கு தண்டனை வழங்கியது. இதையெல்லாம் அறியாததுபோல், கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பளித்தார் என்று நீதிபதியை விமர்சித்திருக்கிறார் கே.பி.முனுசாமி. 

 

 

சட்ட விதிகளுக்கு உட்ப்பட்டு வழக்கின் போக்கையும், வாதங்களையும், ஆவணங்களையும், சாட்சிகளையும் ஆதாரமாகக்கொண்டு, தீர்ப்பு வழங்கிய நீதிபதியை விமர்சித்திருக்கிறார் கே.பி.முனுசாமி.  இது நீதித்துறை மீதுள்ள மாண்பினைக் குறைக்கும் செயலல்லவா? தீர்ப்பை விமர்சனம் செய்யலாம்; தீர்ப்பு வழங்கிய நீதிபதியை விமர்சனம் செய்வது குற்றமாகும். இதை நீதிமன்ற அவமதிப்பென்றும் கருத முடியும். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், தமிழகத்தில் அமைச்சராகவும் இருந்த கே.பி.முனுசாமி இப்படி பேசலாமா?  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெயலலிதா போட்ட பிச்சையில் வந்தவர்; தீர்ப்புக்கு பின்பும் உளறிக் கொண்டிருக்கிறார்' - கே.பி. முனுசாமி பேட்டி

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Even after the verdict, he is thinking about it' - KP Munusamy interview

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கக் காத்திருக்கிறது. இந்தநிலையில் சேலம் வந்திருந்த கே.பி. முனுசாமியைச் சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், ‘அதிமுக கூட்டணி பற்றி இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அதிமுகவின் பொதுச் செயலாளராகப்  பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி நல்ல அரசியல் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். நிச்சயமாக ஏற்கனவே அவர் கூறியதுபோல மெகா கூட்டணியை அமைப்பார். அமைத்து தேர்தல் களத்தில் நிற்பார். நின்று வெல்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் 'திமுகவினர்  தொகுதி பங்கீடு வரை சென்றுவிட்டனர். ஆனால் இதுவரை அதிமுக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்றுகூட தெரியவில்லை. எப்படி மெகா கூட்டணி சாத்தியம்' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். எப்பொழுது யார் யார் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கலாம் என்பதற்காக கேள்விகளை கேட்பீர்கள். எந்தெந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமோ அதற்கு மட்டும் பதில் சொல்லி, தேவையில்லாதவைகளுக்கு பதில் சொல்லாமல் இறுதியாக நடவடிக்கையின் வாயிலாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவோம்'' என்றார்.

டி.டி.வி. தினகரன் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்தது குறித்த கேள்விக்கு, ''ஒரு தரம் தாழ்ந்த மனிதரைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. ஓபிஎஸ் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா போட்ட பிச்சையில் பொது வாழ்க்கையில் இந்த இடத்திற்கு வந்தவர். இந்த இடத்திற்கு வந்த பின்பும் அவருடைய சொந்த புத்தியில் இரட்டை இலை எங்களுக்கு வரும் என கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் உளறிக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்'' என்றார்.

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.