Skip to main content

வேதாரண்யத்தில் கஜாவின் கோரத்தாண்டவம்..( படங்கள்)

Published on 16/11/2018 | Edited on 17/11/2018

 

 

கஜா புயல் காரணமாக  தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இதுவரை 23 பேர் தமிழகத்தில் கஜா புயலுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கஜா புயலால் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளது நாகை மாவட்டம் வேதாரண்யம். முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ளது வேதாரண்யம்.

 

வேதாரண்யம் பகுதியில் உள்ள வண்டல், தலைஞாயிறு உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாட்டுப் பொங்கல் நாளில் களை கட்டிய மீன் விற்பனை

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Sale of  fish on Mattu Pongal day

இன்று தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் விழா கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் வேதாரண்யத்தில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் திரண்டனர். இதனால் அதிகப்படியான மீன் விற்பனை நடைபெற்றது.

வேதாரண்யம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக கூடினர். வஞ்சிரம், காலா, வாலை, அயிலை, திருக்கை,சங்கரா, வவ்வால், நெத்திலி, கிழங்கான் ஆகிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். வௌவால் மீன் கிலோ ரூபாய் 1100 க்கும், வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், இறால், நண்டு ஆகியவை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சில பகுதிகளில் மாட்டுப்பொங்கல் அன்று அசைவம் சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கும் நிலையில் மீன் வியாபாரம் இன்று களைகட்டியுள்ளது. அதேபோல் கும்பகோணத்தில் உள்ள பெரியார் மீன் அங்காடியிலும் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, சண்டை உள்ளிட்ட மீன்கள் மட்டுமல்லாது கடல் மீன்களும் விற்பனைக்கு குவிக்க வைக்கப்பட்டது. விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்த போதிலும் மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் இன்று அலை மோதியது.

Next Story

தொடர் தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

serial attack; Case against Sri Lankan pirates

 

அண்மையாகவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்துவரும் நிலையில், அதேநேரம் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

 

அண்மையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள வானவன் மகாதேவி கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற இரண்டு தாக்குதல் சம்பவங்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.