


Published on 16/11/2018 | Edited on 16/11/2018
கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் தாக்கிய 16.11. 18 அன்று காலை 6.30 முதல் மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து நிவாரண பணிகளை செய்து வருகிறார். கலெக்டரை சந்தித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.