Skip to main content

இருவேறு கொடூர வழக்குகளுக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

afasf

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் தனசேகர்(29). கூலித் தொழிலாளியான இவர் கடந்த (20.01.2019) அன்று அப்பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தனசேகரை கைது செய்து கடலூர் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பளித்தார்.

 

அதில் தனசேகருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நலவாழ்வு நிதி மூலமாக கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரூபாய் 5 லட்சம் இழப்பீடு ஒரு மாதத்திற்குள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

Judges who handed down action verdicts in two different cruel cases

 

இதேபோல் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரசன்ன சரவணன்(29). இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் படித்தபோது பி.எட் படித்த 22 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிரசன்ன சரவணன் காதலியுடன் நெருங்கிப் பழகினார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். எனினும் பிரசன்ன சரவணன் திருமணத்திற்கு மறுத்தார். அதையடுத்து பிரசன்ன சரவணனின் தந்தை பக்கிரி,  தாய் அமுதா ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நியாயம் கேட்டனர்.

 

ஆனால் பிரசன்ன சரவணன் பெற்றோர், திருமணத்திற்கு வரதட்சணையாக 30 சவரன் நகை மற்றும் கார் கேட்டனர். இந்நிலையில் கடந்த 2017ல் அந்த பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும் அவரை திருமணம் செய்ய பிரசன்ன சரவணன் மறுத்ததுடன் 'குழந்தை தனக்குப் பிறக்கவில்லை' எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் பிரசன்ன சரவணன்,  பக்கிரி, அமுதா ஆகியோரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

 

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பிறந்த குழந்தையின் தந்தை பிரசன்னா சரவணன் தான் என்பது மரபணு சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பாலகிருஷ்ணன்,  சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார். இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், பக்கிரி, அமுதா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.