Skip to main content

நண்பர்களால் கொலை செய்யப்பட்ட திருச்சி நகைக்கடை ஊழியர்!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

 jewelery employee with 5 crore rupees

 

நேற்று முன்தினம் (08.05.2021) திருச்சி பிரணவ் ஜுவல்லரியிலிருந்து அதன் உரிமையாளர், மதன் மார்டின் என்ற தன்னுடைய ஊழியரிடம் 5 கோடி ரூபாய் பணம் கொடுத்து சென்னையில் புதிய நகைகளை வாங்க தனி கார் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

 

இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர், நேற்று காலை திருச்சி வந்து சேர வேண்டிய நிலையில், நேற்று இரவுவரை அவர் திரும்பி வராததால் நகைக்கடை நிர்வாகம் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணையைத் துவங்கிய காவல்துறை, மார்ட்டினின் செல்ஃபோன் இறுதியாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தை சைபர் செல் மூலம் கண்டறிய முயற்சி செய்த நிலையில், தொழுதூர் அருகே அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அதனடிப்படையில் தொழுதூர் விரைந்த காவல்துறை, அங்கிருந்து தம்முடைய விசாரணையைத் துவங்கினர். முதல் கட்ட விசாரணை செய்ததில், கார் ஓட்டுநர் தன்னுடைய நண்பர்களுக்கு ஃபோன் செய்து வழியில் அவர்களை ஏற்றிக்கொண்டு வந்தது தெரியவந்தது. வரும்போது மார்ட்டினை கொலை செய்து அவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடித்ததோடு, அவரை மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு புதருக்குள் புதைத்து வைத்துள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், இன்று கார் ஓட்டுநரோடு காவல்துறை மண்ணச்சநல்லூர் பகுதிக்கு உடலை தோண்டி எடுக்கச் சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.