Skip to main content

என்ன செய்வது என்று தடுமாறுகிறது அரசு... ஜாக்டோ ஜியோவின் டி.ஆர். ஜான் வெஸ்லி பேட்டி

Published on 28/01/2019 | Edited on 28/01/2019
Chengalpattu



ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டார்.

 

Chengalpattu


 

இந்தநிலையில், பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தனித் தனியாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இன்று (28.01.2019) மாலைக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்பட்டு, உத்தேச காலி பயிடப்பட்டியல் தாயார் செய்ய வேண்டும். அந்தப்பட்டியலின்படி, தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் 10 ஆயிரம்  தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மாணவர்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் 28ம் தேதிக்குள் (இன்றுக்குள்) தவறாது பணியில் சேர வேண்டும் என உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று இயக்குநர்கள் ராமேஸ்வரமுருகன், கருப்பசாமி தங்கள் சுற்றிக்கையில் தெரிவித்துள்ளனர். 

 

Chengalpattu


 

Chengalpattu


இதனிடையே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார். 
 

தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பத்தவர்கள் கூறுகையில், ''இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. இந்த ஆணையின் அடிப்படையில் அரசின் வேலை வாய்ப்புக்கு எந்த ஒரு முன்னுரிமையும் அளிக்கப்படாது. அரசால் அறிவிக்கப்படும்போது உடனடியாக எந்த முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்த விடுவிக்கப்படுவீர்கள். பணியேற்க வேண்டிய நாள் முதல் தொகுப்பூதியம் கணக்கிடப்பட்டு  வழங்கப்படும். தொகுப்பு ஊதியம் 10 ஆயிரம் அரசால் நிதி ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்ட பின்னரே பெற்று வழங்கப்படும் என்கின்றனர். இதனால் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டுமா? என்று தோன்றுகிறது. எந்த இடத்தில் பணி என்றும் கூறவில்லை'' என்றனர். 
 

john


 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான டி.ஆர். ஜான் வெஸ்லி,
 

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நாங்கள் இன்று போராட்டம் நடத்துகிறோம். இன்று வேலைக்கு திரும்பவில்லை என்றால் காலியிடம் என காட்டி நாளை தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாக கூறுகிறார்கள். உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் பிடிஏ மூலம் ஊதியம் தர சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தொடக்கப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் கேள்விக்குறிதான். மொத்தத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் ஊதியம் வழங்க இவர்களிடம் நிதி கிடையாது. வேண்டுமென்றே அவர்களையும் அலைக்கழிக்கிறார்கள். தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்று அறிவித்துவிட்டார்கள். அதை எப்படி செயல்படுத்தவது என்று தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். 

 

Chengalpattu


 

ஆசிரியர்கள் வராததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்துவதாக செய்திகள் வருகிறதே?
 

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்றுதான் பல இடங்களில் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவு தெரிவித்து  பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் மாணவர்களின் பெற்றோர்கள் என்ற போர்வையில் அதிமுகவினர் ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கூறினார். 
 

தொடர்புடைய செய்தி:-

ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: ஜாக்டோ-ஜியோ கோரிக்கை
 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .