Skip to main content

அரிவாளை கையில் வைத்திருப்பதற்கும் வெட்ட வருவதற்கும் வித்தியாசம் இல்லையா?? -கருணாஸ் கைது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

இன்று விருதுநகர் இராஜபாளையதில் செய்தியாளர்களை சந்தித்த பால்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில்,

 

rb

 

கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு காரணம் அவர் பேசிய பேச்சின் வீரியம் அதிகம் எனவேதான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது குறித்து எந்த பாரபட்சமும் இல்லை மற்றவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அரிவாளை கையில் வைத்திருப்பவருக்கும், அரிவாளால் வெட்ட வருபவருக்கும்  வித்தியாசமில்லையா?  வெட்ட வருபவரை தானே முதலில் பிடிக்க வேண்டும். கருணாஸ் வெட்டுவேன் என்கிறார், என்னை கேட்டுவிட்டு வெட்டுங்க என்கிறார். கருணாஸ் எப்படி இருந்தார், எங்கே இருந்தார் என செய்தித்துறை அமைச்சராக இருந்த எனக்கு தெரியும்.

 

திருவாடனை தொகுதியில் நிற்கும் பொழுது எனக்கு ஒத்துழைப்பே இல்லை என கதறினார். நான் அப்போது அங்கிருந்தவர்களிடம் பேசி அவருக்கு வேலை செய்து தரும்படி பேசி அதன்பின்தான் அவர் வெற்றிபெற்றார். வெற்றிபெற்றவுடன் அம்மாவின் ஆட்சியின் சிறப்பு பற்றி பேசிய கருணாஸ் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பற்றியும் பேசியுள்ளார். இந்நிலையில் எதோ ஒரு நினைப்பில் தன்னால்தான் இந்த ஆட்சி வந்தது என்கிறார். ஜனாதிபதியையே நான்தான் ஜெயிக்க வைத்தேன் என்கிறார். அவர் ஓட்டு போட்டு மட்டுமா அவர் ஜெயிச்சாரு எல்லாருமேதான் ஓட்டு போட்டோம். நாங்களும் பங்களிப்பு கொடுத்தோம் என்று சொல்வதை விடுத்து நான்தான் ஜெயிக்கவைத்தேன் எனக்கூறும் அளவிற்கு அவ்வளவு பெரிய அதிகாரமா இருக்கு கருணாஸிடம்.

 

கருணாஸ் என்று பெயர் வைத்தாலே இப்படித்தான் இதேபோல்தான் இலங்கையிலும் ஒரு கருணா தமிழர்களை காட்டிக்கொடுத்து 2 லட்சம் இறப்புகளுக்கு காரணமாக இருந்தார். இப்பொழுது தமிழ்நாட்டில் எல்லா சமுதாயமும் இணக்கமாக இருக்கிற நேரத்தில் பெரிய கலவரத்தை மேற்கொண்டு எடப்பாடி ஆட்சிக்கு கெட்ட பெயர் வாங்கித்தரும் அளவிற்கு ஒரு ஏவுகணை தாக்குதல், அதிகார தாக்குதல் நடத்தவே இப்படி நடைபெற்றுவருகிறது எனக்கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.