
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (15/06/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறைச் சார்பில் இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பல மாற்று பொன் இனங்கள் பிரித்து எடுக்கப்பட்டு, உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு ரூபாய் 10 கோடி மதிப்புள்ள தங்க முதலீட்டு பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் இ.ஆ.ப., ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப. மற்றும் கூடுதல் ஆணையர் இரா.கண்ணன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.