Skip to main content

வைகோ ஆதரவு குறித்து துரைமுருகன் பேட்டி

Published on 03/12/2017 | Edited on 03/12/2017
வைகோ ஆதரவு குறித்து துரைமுருகன் பேட்டி



ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் வரவேற்போம் என வைகோ திமுகவுக்கு ஆதரவு அளித்து இருப்பது குறித்த கேள்விக்கு சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பதில் அளித்து உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடிகர் விஷால் ஆர்.கே நகரில் போட்டியிடுவது குறித்து கேட்டதற்கு, ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறினார். 

மேலும் பேசியஅவர், பேனர் விஷயத்தில் நீதிமன்ற உத்தரவைக் அரசு  மதிக்கவில்லை. இது அரசின் வீழ்ச்சியின் அடையாளம். கன்னியாகுமரியில் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் ஒன்று இருந்தால் தானே, மழைபாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள் என குற்றம் சாட்டினார் .

அருள்

சார்ந்த செய்திகள்