Skip to main content

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
 Increase in water flow to Sembarambakkam Lake

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று வினாடிக்கு 36 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 497 கன அடியாக உயர்ந்துள்ளது.

அதே சமயம் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 21.93 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி இருந்தது. இன்றைய நிலவரப்படி 22.05 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்றிலிருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்